Thursday, May 12, 2011

கருவின் கவிதை 



ஆச்சரியமாக இருக்கிறது...
எப்படி ஆரம்பித்தது வாழ்க்கை.?
குவளையில் பிறந்து
ஆருரில்
கையெழுத்து பத்திரிக்கை நடத்தி
தமிழ்க்காதல் தொடங்கியது
திராவிடம் நோக்கி திரும்ப
வெண்தாடி வேந்தரையும்
வெள்ளைமனத் துரையையும்
தலைவர்களாய் வரித்து
தமிழும், சமுதாயமும்
அரசியல் நோக்கி நகர்த்த
தொடங்கிய பயணம்..
எத்தனை போராட்டங்கள்
எத்தனை ஊர்வலங்கள்
எத்தனை பாராட்டுரை எத்தனை ஏற்புரை
எத்தனை பட்டங்கள் பதவிகள் மாலைகள் பொன்னாடைகள் மகிழ் விழாக்கள்
எததனை தேர்தல்கள்
எததனை துரோகங்கள்
எத்தனை எத்தர்கள்
அவர்களிடம் கற்றறிந்த பாடங்கள்
எததனை தொண்டர்கள்
குழி பறிக்கும் சீடர்கள்
எத்தனை நடிகர்கள்
கடந்து சென்ற தென்றல்கள்
வேர்விட்ட உறவுகள்...விழுதுகள்..
எல்லாம் தாண்டி .......

தகப்பன் என்ற பெயர் மட்டும் மிச்சமின்று

இந்த தேர்தல் முடிவு
எனக்கு மாலையா...? மலர்வளையமா???

Labels:


BLOG COMMENTS:

மாலையா...? மலர்வளையமா???
இந்த வரிகளை எங்கோ பார்த்த நினைவு. சுட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...
 
எப்போதும் சொந்தமா எழுத நான் என்ன எட்டையபுரத்தானா? பதிப்பது எல்லாமே மனதை பாதித்ததும் , ப்திந்ததும் தானே.. :-) உங்கள் ஆதங்கம் புரிகிறது நஸீர். :-)
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

follow me on Twitter
Who Links Here