Saturday, April 13, 2013

கடந்தவை

கடந்தவை
 ========
 பத்தி பத்தியாய்
 எழுதி வைக்கிறேன்.
 நல்லதென்றும் கெட்டதென்றும்
 நான் நினைப்பதை
 இலக்கிய இலக்கண
 வரையறையை
 வாழ்வியல் விசாரங்களை
 எது எழுதலாமென்பதை
 எப்படி எழுதலாமென்பதை
 யாருக்கு எழுதவேண்டுமென்பதை
 திறனாய்வா
 திரைப்படமா
 இல்லை
 வெறும் வியப்பா
 எதுவாயினும் அதை
 வார்த்தை கத்தைகளுக்குள்
 பொத்தி வைத்து
 என்னை வியந்து கொள்ளும்
 இறுமாப்போடு

விடுபட்டுப்போன அன்பும்
 மனிதமும் நேர்மையும்
 சிரிக்கின்றன வாசகனைப் பார்த்து.

என்றேனும் ஒரு நாள்
 எனக்கும் அது விளங்கக்கூடும்

காலம் கடந்த உண்மைகள்
 காயம் சொரிந்து கொள்ள
 சுகமான வலியே  தவிர
 வேறென்ன.
 பாலைவனத்து நிலவாக
 போனதெந்தன்
 பழுது நோக்கும் பார்வை

இளக்கம் இல்லாமல்
 இலக்கியமா..??

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...