Monday, June 20, 2005

பாவக்கறை


கல்யாணமான மூணாம் நாளே
அடி விழ தொடங்கிச்சாம்

கொஞ்சம் விவரமறிந்த பெரியவள்
இதே போலொரு சண்டையில்
கைவிரலை நெட்டி முறித்தபடியே
சொன்னது
நினைவிலாடுகிறது.

வெள்ளிக்கிழமை படம் துலக்கி
பொட்டு வைக்காததற்கும்
அடுக்களையில் அகஸ்மாத்தாய்
ஓடிய அதிர்ஷ்டக்கரப்பிற்கும்
சற்றே அதிகமாய் கொதித்துவிட்ட
ரசத்திற்கும்
ஈரம் சொட்டக் குளியறையில் கிடந்த
உள்பாவாடைக்கும்
அந்திசாய விளக்கு
ஏற்றாததற்கும்
அத்தைக்கு காப்பியில்
சர்க்கரை குறைந்ததற்கும்
விசேஷநாளில் வீட்டுக்கு
விலக்கானதற்கும்
அதிகமாய் சிரித்ததற்கும்
உடல் உபாதையில் அசந்து
கண் அயர்ந்ததற்கும்
பிள்ளைகள் மார்க்கு
குறைந்த்தற்கும்

இத்த்னை கால்மாய் நீ
வாங்கிய அடிகளும்
அதன் வடுக்களும் உனக்கு
மற்ந்ததோ இல்லையோ
எனக்கு மற்க்கவில்லை
என் அம்மா...

பொண்டாட்டி தாசனென்று
யார் சொன்னாலும்
பாதகமில்லை என்றுதான்
எனைப் பெற்றவனின் பாவங்களை
இப்போதிருந்து கரைக்க
விழைகிறேன் என்னிலிருந்து
பார்க்கும் பெண்களின்
பாதெமெலாம் நான்
கழுவினால் கூட
தீராது அவன் பாவம்

நீ போனால்தான் உன் அருமை
விளங்கும்
என்கிறேன்.
சாபம் தராதே
என் அருமை அப்படியா
தெரியவெண்டும்
என்கிறாய்.

அம்மா நீ
எனக்கு மட்டுமா..??

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...