Tuesday, June 28, 2005

பிறப்பும் பிழைப்பும்

அழுக்கையே சுவாசித்து
இருட்டையே மோகித்து
இண்டு இடுக்களிலும்
சந்து பொந்துகளிலுமே
குடித்தனம் செய்கிறாய்

கழிவறையில் காண்கிறேன்.
சாளவத்தில் காண்கிறேன்
சமையலறையில் காண்கிறேன்
அட..புத்தக அலமாரி கூடவா..??

எத்தனை மருந்தடித்தாலும்
வெவ்வேறு ரூபங்களில்
அவதரித்துக் கொண்டே இருக்கிறாய்
உன்னைப் பார்த்தால்
இல்லை..இல்லை
உன் வாசம் தெரிந்தால் கூட
அருவறுப்பும் பயமும் யாவர்க்கும்.
உனக்கோ யாரை பார்த்தாலும்
பயமும் அவநம்பிக்கையும்
வெறுப்பில் தின்று, வெறுப்பை விழுங்கி
என்ன சாதிக்கிறோம்
என்றெண்ணியோ
கொஞ்ச நாள் கலந்து வாழ விழைந்தாய்
கலக்கவே முடியாதபடி
உன் அழுக்கும், உன் மீதுள்ள அருவறுப்பும்
உன்னை மறுபடியும் தனியனாக்கின.
மீசை இருந்தும் முறுக்க முடியாத்
அல்பன் நீ..
காட்டு விலங்குகள் கூட நிச்சலனமாய்
வாழும் காலத்தே
வீட்டுள் இருந்தும் அமைதி கிட்டா
ஜீவன் நீ..
அணு ஆயுதப் போர் முடிந்தாலும்
நீ இருப்பாயாம்..
என்ன லாபமுனக்கு..?
பிணங்க யாரும் இல்லாமலேயே
தானாக சாவாய் நீ அதன்பின்..

மல்லாக்கத் தூக்கிப் போட்டு
மிதிக்கலாமே என்கிறான் நண்பன்.
கருமம்....
உனது ரத்தம் கூட அழுக்கு
கண்டாலெனக்கு வாந்தி வரும்
பிழைத்துப் போ.

பிகு:

பெற்றோர் ஊரிலிருந்து வருவதால் வீடு சுத்தம் செய்யும் வேலை நடக்கிறது. கரப்பு ... கரப்பு... என்றொரு ஜீவனை அடிக்கடி காண்கிறேன் மூன்று நாளாய்.
அதன் தரிசனம் தந்த அருவறுப்பில் விளைந்த கவிதை ( ?!!)

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...