Tuesday, March 17, 2015

தேஜஸ்வினி

ஆண்டாள் ப்ரியதர்ஷினி
குட்டி ரேவதி
சல்மா
சுகிர்தாராணி
லக்‌ஷ்மி சரவணகுமார்...
ஜெயமோகன்
ஜெயகாந்தன்
பாலகுமாரன்
நீல பத்மநாபன்
தகழி சிவசங்கர பிள்ளை
சுகா
புனத்தில் குஞ்சனப்துல்லா.....
வகை தொலை இல்லாமல்
நீள்கின்ற இந்தப் பட்டியலில்
பெரும்பாலானோரை
உன்னை சுற்றி இருந்தவர்கள்
யாருக்கும் தெரியாது
நீயோ இவர்களின் அணுக்கி...
இத்தனை பேரை தெரிந்தும்
சுற்றி இருந்த அபத்தங்களை
சகித்துக் கொண்டும்
சீறிக் கொண்டும் இருந்தாய்.
புத்தியற்றவர்கள் நிம்மதி
பெற்றவர்கள்.

கோயிலுக்கு நிதம் போய்க் கொண்டு
காய் நறுக்கிக் கொண்டு
கழுவின பாத்திரத்தையும்
அடுப்பு மேடையையும்
திரும்பத் திரும்பக் கழுவிக்கொண்டு
விஜய் டீவியில் ”நீயா நானா” பார்த்துகொண்டு
பண்டிகைக்கு பண்டிகை பட்டுப் புடவைக்கு
மல்லுக் கட்டிக் கொண்டு
இயலாமைகளை எல்லாம் ஒற்றை
உதட்டு மடிப்பில் மூடிவைத்து
என்னுடன் தனியே இருக்கும்
சந்தர்ப்பங்களில் மட்டும்
மளுக்கென்று அழுதுகொண்டு
நீ எங்காவது ஒரு மூலையில்
உயிரோடாவது இருக்கக் கூடாதா?

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...