Thursday, March 05, 2015

பரிகாரம்

பிடித்த கலரில் பாலியஸ்டர் சட்டை
கிடைக்காததையும்
புகை நெடியடிக்க தீபாவளி பட்டாசு
அலுக்க அலுக்க கொளுத்தாததையும்
முழுப்பரிட்சை லீவுக்கு போக...
மாமா வீடு இல்லாததையும்
ஏசி தியேட்டர் லெதர் சீட் இல்லாது பார்த்த
சகலகலாவல்லவனுக்கும்
இரவலில் ஓட்டியே பழகிய சுவேகா
என் வீட்டு வாசலில்
சொந்தமாக நிற்காததையும்
பிடித்த கல்லூரி...
பிடித்த பாடம்...
பிடித்த ஸ்நேகிதி...
பிடித்த வேலை...
இப்படியாக...
கிடைக்காமல் போன எல்லாவற்றுக்கும்
சொல்லி சொல்லி அழுதிருக்கிறேன்.
இன்று....
உன்னை இழந்ததின் சோகம்
என்னை ஊமையாக்கி
உறைய வைத்திருக்கிறது.
என் நம்பிக்கைகளையும்
எதிர்பார்ப்புகளையும்
பொடிப்பொடியாய்
உடைத்திருக்கிறது
அடைய நினைத்தவைகளின் விலகல்
தந்த துயரம் தாண்டியும்
இருக்கும் உறவை இழக்கும் துயரம்
மாபெரும் சோகம்.
இன்னொரு முறை
பிறந்து வாயேன்.....
உனக்கு இழைத்த
துன்பத்துக்கெல்லாம்
பரிகாரம் செய்கிறோம். 

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...