Sunday, November 22, 2009

எமக்குத் தொழில்....




கொள்கையேதுமில்லை
பிறந்தபோழ்து என்னிடத்தே
வயிற்றுப்பாட்டுக்கும் கதகதப்புக்கும்
அண்டிக் கொள்வதன்றி.
வளர வளர
சுற்றமும் நட்பும்
கண்டதும் கல்வியும்
இளமையும் செலுத்திய திசை
குறுகுறு பயணங்கள் ...
கம்யூனிஸ்ட் என்றார்கள்
மதவாதி என்றார்கள்
இடது சாரியோ வலது சாரியோவென
இரகசியம் பேசினார்கள்.
பொருள்முதல்வாதி என்றுகூட
பொருமினார்கள் வறியர்கள்
இனவெறியன் என்றார்கள்
ஒரு சாரார்.
ஆணவமும் அகந்தையுமே
ஆன்மீக போர்வையில் கொலுவிருக்கிறது
என்றோரும் உண்டு.
குழந்தையாகவே இருக்கிறேன்
இன்னமும் நான்
மாற்றங்கள் ஏதும் இல்லை
வருடங்கள் கழிந்ததைத் தவிர
எழுத்தை மதிக்கின்ற
இடத்திலா இருக்கிறேன்
கொள்கைக்கு தாலி கட்டிக் கொள்ள..??


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...