Wednesday, November 18, 2009

கண்ணதாசன் எழுத்து....


தன்னுடைய ஆளுமையை தனக்குப் பின்னும் கூட பிறர் வழியே இணையமெங்கும் விசிறியடிக்கும் சுஜாதாத்தாவின் அணுக்கமான விசிறியின் கிறுக்கலிருந்து வேட்டைக்காரன் பாட்டு லிங்கைப் பிடித்தேன். போனதேன்னவோ “ ”ஏன் உச்சி மண்டைய்ல சுர்ருங்குது..” என்கிற பாட்டைக் கேட்கத்தான்.


என்னவோ என் நேரம் எல்லா பாட்டையும் டவுன்லோடினேன். அதிலிருந்து காரில் இதே பாட்டுத்தான் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. ”கரிகாலன் குழல் போல” என்று ஆரம்பித்து காதில் கரையும் அந்தப் பாடல் பிடித்திருப்பதற்கு காரணம்...


பாட்டில் உள்ள அருந்தமிழா..?

கொஞ்சலும் சிருங்காரமும் நிரம்பிய பெண்குரலா..?

இசையா..?

தாளக்கட்டா..?

படத்தின் நாயகி அனுஷ்காவின் சன் டீவி பேட்டியை நான் பார்த்ததாலா..?

பாடலில் நிரம்பி வழியும் ஏகப்பட்ட ரொமான்ஸா..?


ஏதோ ஒன்று ... சரியாகப் படமாக்கப்பட்டால், எல்லா டீவியிலும் டாப் டென்னில் தமிழ் கூறும் நல்லுலகம் குறைந்தது நான்கு மாதம் பார்க்கப் போகிறது. காதலர்கள் ரகசியமாக ப்ளூ டூத்திக் கொள்ளப் போகிறார்கள். கல்லூரி மேடைகளிலும் கன்னிகளும், தமிழ்ச்சங்க விழாக்களில் ஆன்டிகளும் இன்னம் ஒரு வருடத்துக்கு தங்கு தங்கென்று குதிக்கப் போகிறார்கள். என்னைப் போன்ற மாமாக்கள் கார்களில் கேட்டுக் கொண்டே கன்னம் சிவந்து அபத்தமாக சிரித்துக் கொண்டே அடுத்தவன் ட்ரங்கில் புதிதாக வாங்கிய மஸ்டாங்கை செருகப்போகிறார்கள். :-) :-)


வாழ்க.. வாழ்க. !!

2 comments:

  1. Anonymous9:28 PM

    ஜொள்ளுப் பதிவென்றாலும் பரவாயில்லை, மறுபடி எழுத ஆரம்பித்திருப்பதற்கு நன்றி - தொடர்ந்து அடிச்சு விளையாடுங்க :)

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  2. ஆசிர்வாதத்துக்கு நன்றி. :-)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...