Thursday, April 29, 2004

எழுதாக் கவிதை

============

காலையில் அரக்கப் பரக்க
வாக்கிங் போய்
கிடைத்தை தின்று
பார்க்கிங்
லாட் மூடுவதற்குள்
காரை உள்செலுத்தி
ஓடி வந்து காலை மீட்டிங்
தாமதமாய் உள்நுழைந்து
பணியிடத்தில் கூப்பிட்ட
குரலுக்கு ஓடியாடி
மாலை மனையாள் பணிக்கு
விடை கொடுத்து
காய்கறி வாங்கி அடுக்கி
பெற்ற செல்வத்தின்
சாக்கர் க்ளாஸ¥க்கு
போய் வந்து
அதன் முகம் கழுவி
கால் துடைத்து
உடை மாற்றி
சோறும் நீரும் கொடுத்து
தான் குளித்து
மீண்டும் தின்று
மனைவியை
அழைக்க
பணியிடம் சென்று
பின்னிரவில்
வீடு மீள
தோன்றியது .....

இன்று
கவிதை எதுவும்
எழுதவில்லை.

தூக்கத்தில் புரண்டு
'ஐ லவ் யூ டாடி' என்று
கனவுக்குள்
சிரித்தது கவிதை.


blog_042804

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...