Tuesday, April 13, 2004

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது
===============

பக்தி

மாலை கோவில் போக வேண்டும்
மறக்காமல் அர்ச்சனை செய்ய.

அரளியில்லா கதம்பம் வேண்டும்
அரளிபட்டால் அரிக்கும் இவளுக்கு.

கனிந்த வாழைப்பழம் வேண்டும்
காலையில் இரண்டு நாளாய்க்
கழிவறை போகவில்லை.

முத்திய தேங்காய் நல்லது
திரும்பும் ஒற்றை மூடி
தோசைக்குச் சட்டினியாகும்.

அய்யருக்குச் சில்லரை தேவை
ஐந்தாய்த் தட்டில் போட்டால்
மீதி தரமாட்டார்.

உண்டியலுக்குத் தேவையில்லை
போனமுறை சில்லரையின்றி
முழுரூபாய் போட்டான் உதவாக்கரை.

செருப்பை மறக்காமல்
பிரித்து விட வேண்டும்.



என்னதான் எழுதி இருக்கிறார் என்று கனடா வெங்கட்டின் தளத்தில் இன்று மேய்ந்தேன். கண்ணில் பட்ட இரண்டு கவிதைகளில், எனக்குப் பிடித்தது இதுதான் என்று நான் இங்கே எடுத்த்துப் போட்டால், என் அறிவின் எல்லைகளும், எதை நோக்கி என் மனம் போகிறது என்பதும் அன்பர்களுக்கு ஒருவாறு விளங்கும் என்பதே என் நோக்கம்.

என்னுடைய கருத்துக்கள் இவ் விஷயத்தில் மாறலாம். வலைப்பூக்களைப் பற்றியும் இப்படித்தான் அவரிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன். கிண்டல் அடித்தேன். இப்போது முழு வேகத்தில் வலைப்பதிந்து கொண்டிருக்கிறேன். வளர விருப்பம் உள்ளவர்களுக்கு எதுவும், எக்காலத்திலும் இறுதிக்கருத்தல்ல. எனக்கும் அவ்விதமே.

அவருடைய 'சங்கம்' முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

இத்துடன் இந்த சர்ச்சையை முடித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...