Tuesday, April 06, 2004

துறை சார்ந்த பதிவுகள் - புரட்சி வெடிக்கிறது...???
======================================

எங்கே ஆரம்பித்தது என்று தெரியவில்லை. சுந்தரவடிவேல், வெங்கட், பிரகாஷ் என்று எல்லாரும் துறை சார்ந்த வலைப்பதிவுகளைக் கொண்டுவந்து, அந்தந்தத் துறை விற்பன்னர்களை தமிழிலேயே வெளுத்துக்கட்ட வைத்து விடுவது என்று இறங்கி இருக்கிறார்கள்.

என்னை Networking பற்றி தமிழில் எழுதச் சொன்னால், போங்கப்பா என்று சொல்லி விடுவேன்.

காலையிலிருந்து மாலைவரை அலுவலகத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையை பற்றி சாயந்திரமும் என்னால் வலைப்பதிவில் எழுத முடியாது. அது என் மேனேஜனுக்கு நான் ரிப்போர்ட் கொடுப்பது போல ஆகிவிடும். மேலும் என் திருப்திக்காக, நான் எழுதிப் பழகுவதற்காக, என் பணி தவிர்த்த ஜன்னல் வழியே நான் எட்டிப் பார்ப்பதற்காக வைத்திருக்கும் என் பதிவை , உலக நன்மைக்காக பயன்படுத்தும் சக்தி என் எழுத்துக்கு இப்போது இல்லை.அந்த உத்தேசமும் எனக்கு இல்லை.அதை எழுத்தில் ஏற்கனவே பல பரிட்சார்த்த முயற்சிகள் பண்ணி ஜெயித்தவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

ரங்கோலி போடுபவர்கள் ரங்கோலி போடட்டும். கோலத்தில் திரிகோணமிதி சொல்லித் தர விரும்புபவர்கள் அதைப் பண்ணட்டும். வலது மூளையையும் இடது மூளையையும் ஒன்றாக்கி, குழப்பி, காற்று தேடி வெளியே ஓடி வரும் நான் களைப்படைய விரும்பவில்லை.

என் பதிவு சில்லுண்டி விஷயங்கள் பற்றியே இருக்கட்டும் .

நான் எதை விரும்புகிறேனோ, அதை செய்ய இங்காவது சுதந்திரம் இருக்கட்டும்.

'யாரும் உன்னை வற்புறுத்தவில்லை ' என்று நீங்கள் சொல்லலாம். ஆனாலும்
தமிழில், தமிழ்ப்பதிவுகளில் சில்லுண்டி விஷயங்களே எழுதப்படுகின்றன
என்று 'போகிற போக்கில்' பிரகாஷ் (?!! ) கமெண்ட் அடித்ததால் எழுதத் தோன்றிற்று.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...