Wednesday, April 14, 2004

நேசமுடன் வெங்கடேஷ்
====================

சிஃபி வெங்கடேஷ் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் யோசிப்பவரல்ல. எப்போதும் அவரிடம் இருந்து ஏதாவது அறிவிப்பு மடல்கள் வந்து கொண்டே இருக்கும். பழைய விஷயங்களைக் கூட வித்தியாசமாக செய்து எல்லோரையும் வியக்க வைப்பதில் அவர் "இணையப் பார்த்திபன்".

அவரிடம் தனிமடல்கள் அனுப்பினால் மறந்து விடாமல் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வது மட்டுமல்ல, ஆலோசனையும் வழங்கி, கடைசியில் 'நேசமுடன் வெங்கடேஷ்' என்று கையெழுத்திடுவார். என் நண்பரகள் வட்டாரத்தில் வார்த்தையாடும் போது கூட 'நேமுடன்' வெங்கடேஷ் மெயில் போட்டாருய்யா என்று சொல்வதே வழக்கம்.

போன வார இறுதியில் 'நேசமுடன்' மடலிதழ் வழியே எல்லோருடனும் பேசப் போவதாக அவர் அறிவிப்பு இட்டதும் ' ஆஹா..சரியான பெயர் ' என்று நானே உரக்கச் சொல்லிக் கொண்டேன். இன்னமும் சப்ஸ்க்ரைப் செய்யவில்லை. விரைவில் செய்ய வேண்டும். ஆனால், மடலாடற்குழுக்களில் எழுதுபவர், வலைப்பூ வைத்திருப்பவர், ஏற்கனவே வெப்சைட் வைத்திருப்பவர், அதையெல்லாம் விடுத்து, அவரே அறிவிப்பில் சொல்லி இருக்கும்படி ரிவர்ஸில் ஏன் போக வேண்டும் என்று யோசித்துக் கொண்டே...ஏ ....ஏ இருக்கிறேன். ஏற்றுக்கொண்ட பொறுப்புகளினாலும், பணி அழுத்தத்தினாலும், மடலாடற்குழுக்களிலேயே ரெகுலராக எழுத முடியவில்லை என்று குறைபட்டுக் கொள்பவர் இந்த மடலிதழை தொடர்ந்து நல்லபடியாக நடத்த வேண்டும் என்று நினைப்பது , நிச்சயமாக நமக்குத்தான் லாபம்.

இதில் இன்னொரு பயனும் விளையப்போகிறது. நம்மில் யாராவது முக்கியமான இலக்கிய சம்பந்தமான விஷயங்களை அறிவிப்பு செய்ய விரும்பினாலோ, புதிதாக வெளிவந்த புத்த்க தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பினாலோ, உலகமெங்கும் சிதறிக்க்கிடக்கும் நாம் எல்லாரும் இணையம் வழியே புத்த்கம் வாங்க ஒரு நல்ல வெப்சைட் பற்றிய தகவல்கள் வேண்டினாலோ, நேசமுடன் மடலிதழாசிரியருக்கு ஒரு 'காயிதம்' போட்டால் போதும்.

என் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...