Wednesday, April 14, 2004

எரிச்சல் தாங்கலை சாமி....
====================

விருமாண்டி, தென்றல், ஆட்டோகிராஃப் என்று பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்டில் ' கனவு மெய்ப்பட வேண்டும்' என்ற புதுப்படமும் சேர்ந்திருக்கிறது. சாக்ரமண்டோ தேசி ஸ்டோர்களில் இந்தப் படங்களின் அடர்தகடு வந்து சேருவதற்குள் எனக்கு சதாபிஷேகம் பண்ணி விடுவார்கள் போலிருக்கிறது.

kanavu02


க.மெ.படவேண்டும் டைரக்டர் ஜானகி விஸ்வநாதன் ஏற்கனவே 'குட்டி' என்ற படம் எடுத்திருக்கிறார் என்று நமக்குத் தெரியும். குட்டி படம் குழந்தைத் தொழிலாளர் கொடுமையை மனம் கனக்கும் வண்ணம் சொல்லிச் சென்ற படம். காட்சியமைப்புகள் சற்றே செயற்கையாக இருந்தாலும், கனிவும் கருணையும் மிக்க டைரக்டரின் மனசுக்காக , அது அந்தப் படத்தில் வெளிப்பட்ட விதத்துக்காக, எனக்குப் பிடித்தது. நாசர், தன் மகளோடு அந்தப் படத்தில் பாடும் ஒரு பாடல் கொஞ்ச நாளைக்கு மனசை என்னமோ செய்து கொண்டிருந்தது.

இந்தப் படத்தின் கருவும் சீரியஸ் ஆன 'தேவதாசி' விஷயத்தை ஒட்டியதுதான். பல கதைகளில், பல திரைப்படங்களில் எல்லோரும் தொட்டதுதான். ஜானகிராமனின் அம்மிணி, பாலகுமாரனின் 'அகல்யாவில்' சிவசுவின் அம்மா, வாழ்வே மாயம் ஸ்ரீப்ரியா, மோகமுள் யமுனாவின் அம்மா , என்று சட் சட்டென்று விளக்கு போட்டாற்போல கொஞ்சம் பேர் வந்து போனார்கள். ரம்யா கிருஷ்ணன் இந்த மாதிரி பாத்திரத்திற்கு பொறுத்தமான ஆள்தான். :-)

ramya01


யப்பாடி, நம்மாளுங்க யாராவது மெட்ராஸ்ல படத்தைப் பாத்து சுடச்சுட எழுதுங்கப்பா...

பாலைவனத்துல மாட்டிகிட்டு காஞ்சு போனா மாதிரி இருக்குது.

பி.கு: இந்தப் பதிவு வந்த ஒரு வாரம் கழித்து சுரேஷ் ராயரில் இட்ட விமரிசனம்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...