மனசு வானம்தான்
==============
காதல் கவிழ்ந்தால் தாடி வருகிறதோ இல்லையோ, கவிதை வருகிறது என்று கொஞ்ச காலத்துக்கு முன் ஒரு ஜோக் சொல்வார்கள். இப்போது அதற்குக் கூட நேரம் இல்லை...அடுத்த காதல் செய்ய நேர்ந்து விடுவதால். எதுவும் கவிழாமலேயே, கவிதை, அதுவும் உருப்படியான கவிதை எழுதுவதற்கு ஒரு தனி மனசு வேண்டும்.
அது இருக்கிறது ராஜ்குமாருக்கு.
ராஜ்குமார் என் கல்லூரி நண்பன். மகா கோபக்காரன். உணர்ச்சிக் குவியல். அனிச்சம் பூ மனசு. உணர்ச்சி வசப்படும் பொழுது மூக்கு 'சிங்கார்' குங்குமத்தை அப்பியது மாதிரி சிவந்து விடும். என்னை காலேஜில் 'சுள்ளான்' என்றுதான் கூப்பிடுவான். தீவிர ரஜினி ரசிகன்.அடிக்கடி அவனை உசுப்பி விட்டு, இர்ரிடேட் பண்ணி கன்னத்தில் அறை வாங்கி இருக்கிறேன். வலிக்க வலிக்க மூஞ்சுக்கு நேரே உண்மை பேசுவான். பெண்கள் கூட பழகுவதில் கூச்சம் என்பதால், நான் அவனை "போலிச்சாமியார்" என்றுதான் கூப்பிடுவேன்.
ராஜ்குமார் கல்லூரி நாட்களில் இருந்தே கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான். அத்தனையும் மனசுக்கு புரிகிற மாதிரி பூமிக்கு வந்து நிசம் பேசும் கவிதைகள். NIIT Madras ல் பிஸினஸ் மானேஜராக பணிபுரிகிறான். சமீப காலங்களில் அதிகம் எழுதாமல் இருந்தான். என்னுடன் அடிக்கடி தொடர்பு இருப்பதால், அவனை எழுதச் சொல்லி ந்ச்சரித்து, வலைப்பூவுக்கு அழைத்து வந்திருக்கிறேன்.
இங்கே அவன் மன வானத்தைப் பார்க்கலாம்.
முதல் பதிவில் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு எழுதி இருக்கிறான்.
சொன்னேனே....அவன் கவிஞன் .!!!!!
Wednesday, April 28, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
மாமன்னன் ----------------------------- மாரி செல்வராஜின் மாமன்னன் பார்த்தேன் உன் வயதை விட குறைந்த வயதுடைய ஒருவன் உன் தந்தையை ஒருமையில் அழை...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
No comments:
Post a Comment