Thursday, April 01, 2004

தேர்தல் ஜூரம்
===========

தமிழ்நாட்டில் தேர்தல் ஜூரம் அடிப்பது போல் வலைப்பூக்களிலும் அங்கங்கே அடித்துக் கொண்டிருக்கிறது. கருத்துக்கணிப்பு எடுக்கிறார்கள். தொகுதியிலுள்ள வேட்பாளர்களின் தராதரத்தைப் பற்றி அலசுகிறார்கள். ரஜினியின் வாய்ஸ் எடுபடுமா என்று பேசுகிறார்கள்.

எல்லாம் சரிதான்...

ஆனால், தமிழ்நாட்டில் மாநில ஆட்சி மீது நிலவும் அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கக்கூடாது என்கிறார்கள்.யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டு மக்கள் கருணாநிதி என்று சொன்னால் ' ந்மக்கு குறுகிய மனப்பான்மை வந்துவிட்டது. ' என்று வெங்கடேஷ் எழுதி இருக்கிறார். பின்னூட்டம் அளித்திருக்கும் 'படித்த' பெரும்புள்ளிகளும் நம் முட்டாள்தனத்தை நொந்து கொண்டு விசனப்பட்டிருக்கிறார்கள்

'சோனியா வேண்டுமா..வாஜ்பாய் வேண்டுமா' என்பதுதான் கேள்வியாய் இருந்திருக்க வேண்டும் என்றால், அந்தக் கேள்வி கேட்க காங்கிரஸூம், பா.ஜ.க வும் இந்தியாவெங்கும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித் தனியாக நின்று தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். எப்போது அது நடக்கவில்லையோ, எப்போது அவர்கள் மாநிலக்கட்சிகளின் கூட்டணியை நாடினார்களோ, அப்போது மாநில ரீதியான எண்ணங்கள் உள்ளே வரத்தான் செய்யும். அப்போதுதான் ந்ம்மைப் போல பெடெரல் அபைப்பில் இருக்கும் நாட்டின் பிராந்திய ரீதியான எண்ணங்கள் மத்திய அரசை எட்டும். அது நடக்காமல், வாஜ்பாய்க்காக ஒட்டுப் போட்டு பாஜக- கூட்டணியை ஜெயிக்க விட்டால் தமிழ்நாட்டில் நல்லாட்சி நடந்து, மக்கள் சந்தோஷத்தில் பூத்து குலுங்குகிறார்கள் என்ற மாயை ஏற்பட்டு விடும். பிற்கு அம்மா வைத்ததுதான் சட்டம். தனக்கு எதிராக யார் வாயை திறந்தாலும் 'ஆப்பு'
என்று ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் கந்தரகோலம் இன்னமும் முழு வேகத்தில் தொடரும்.

அப்படி இல்லாமல், தமிழ்நாட்டில் இந்தக் கூட்டணி தோற்று , மக்களின் எதிர்ப்பு பலமாக பதிவு செய்யப்பட்டால் ஆளும்கட்சிக்கு தற்காலிகமாவேனும் ஒரு மூக்கணாங்கயிறு போட்ட திருப்தியில் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.

பிறகு வாஜ்பாயை பேருக்கு பிரதமராக்கி, அத்வானி கோஷ்டிகளும், சங் பரிவார் அமைப்புகளும் இன்னமும் எங்கேயாவது ரதயாத்திரை நடத்தும். எங்காவது சர்ச் இடிபடும். மசூதி தீக்கிரையாகும். குஜாரத் போல
பயங்கரங்கள் இன்னமும் தொடரும். அந்த அலையில் தேர்தல் நடந்து, தீப்பந்தம் கொளுத்திக் கொடுத்த்வர்க்கு
மறுபடியும் அதிகாரம் கிடைக்கும்.

மக்கள் வெகுசுபிட்சமாக வாழ்வார்கள் அந்த ராம ராஜ்ஜியத்தில்.........

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...