Thursday, April 29, 2004

யாக்கை திரி
=========

மேற்கண்ட பாடலை எழுதிய பாடலாசிரியர் யாராயிருந்தாலும் , என்னை கொஞ்ச நாள் முன்பு பார்த்திருந்தால், சூடாக நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று அதற்கிருந்த அவசியம் போய் விட்டது.

போதுவாக நான் அலுவலகத்தில் யாஹூ சாட்டில் இருப்பதோ அல்லது ஹெட்ஃபோனை காதில் வைத்துக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதோ கிடையாது. இன்று அபூர்வமாக ஆய்த எழுத்து பாட்டுக் கேட்க வேண்டும் என்று தோணிப்போக, ஏற்கனவே டவுன்லோடு செய்து வைத்திருந்ததை ( பாட்டு கேட்காதவனுக்கு டவுன்லோடு எதற்கு என்று கேட்பவர்களுக்கு - நான் அலுவலகத்தில் தான் பாட்டு கேட்க மாட்டேன். காரிலும், வீட்டிலும் கேட்பேன். அவ்ளோ தொயில் பக்தி...) கொஞ்சம் கேட்டேன்.

யாக்கை திரி என்ற பாடலைக் கேட்டு விட்டு நண்பர்கள் அர்த்தம் கேட்டபோது , நடுவில் 'த்' இருப்பதாக நினைத்துக் கொண்டு நான் கொனஷ்டையாக கொடுத்த விபரீத அர்த்தம் நினைவுக்கு வந்தது. பாட்டு அப்படி இல்லை...

யாக்கை (என்பது) திரி (என்றால்) காதல் சுடர் (ஆகும்)

இப்படியே கீழே மற்ற வரிகளையும் படிக்கவும்..

ஜீவன் நதி காதல் கடல்
பிறவி பிழை காதல் திருத்தம்
இருதயம் க்ல் காதல் சிற்பம்.
ஜென்மம் விதை காதல் பழம்



ஆஹா..எப்படி இருக்கிறது..

எதுக்கு ஒழுங்கா 'ச்'சணும், "ப்"பணும், "த்"தணும் ங்கிறது இப்போ வெளங்குச்சு சாமிகளா...

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...