Friday, April 09, 2004

மூன்று வருடங்களுக்குப் பிறகு.......
===============================

மேனேஜனிடம் சொல்லிக் கொள்ளாமல், முன்னறிவிப்பு இல்லாமல், எந்த முகாந்திரமும் இல்லாமல் 4 மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு சட்ட விரோதமாக லீவ் எடுத்தே ஆக வேண்டும். இதை கடந்த 10 வருடங்களாக ஒரு தவம் மாதிரி செய்து கொண்டிருக்கிறேன்.

இன்று அம் மாதிரி இரு நாள்.

லேட்டாக எழுந்து கழிவறைக்குள் தினசரி பிரவத்துக்கு செல்லும் போது , அவசரமாக புத்தக அலமாரியை பீராய்ந்ததில், 'நிஜங்கள்' என்ற புத்தகம் கிடைத்தது. மூன்று வருடங்களுக்கும் முன் சென்னை மவுண்ட் ரோடு ஹிக்கின்பாதம்ஸில் , அலமாரி அலமாரியாக பொறுக்கிக் கொண்டிருந்தபோது வாங்கிய ஒரு ஒல்லி புத்தகம்.

ருத்ரனை நீங்கள் எல்லாம் காலை நேர ராஜ் டீவில் பார்த்திருக்கலாம். விளம்பர தாத்தாக்கள் போல நேர்த்தி தாடியாக இல்லாமல், ஏராளமாக நிஜ தாடி வைத்துக்கொண்டு, நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு, தீட்சண்யமான கண்களோடு காலை நேரத்துக்கு சம்பந்தம் இல்லாமல் சீரியஸாக பேசிக் கொண்டிருப்பார். அவர் எவ்வளவு பெரிய ஆள் என்பது விகடன் நண்பர் ம.கா.சிவஞானம் மூலம் பிறகு தெரிந்தது.

இன்று அந்தப் புத்தகத்தை இன்னொருமுரை படித்தேன். மனோவியாதியை குழப்பாமல் விளக்கும் எளிய மொழியில் சொல்லப்பட்ட 12 கதைகள். ஒவ்வொரு கதையின் முடிவிலும் டாக்டர் ருத்ரனின் விளக்கங்கள். obsessive compulsive disorder, alchoholic anonymous, delusional disorder, personality disorder, depression, manic disorder, schizophrenia என்று வகைக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டு டாக்டர் வெளுத்துக்கட்டி இருக்கிறார். " This book is dedicated to vidya sagaran, vancheeswaran, ravindran, ravindramoorthy and srinivasan , for reasons known to us " என்று சொல்லும் முதல் பக்கத்தை படித்தவுடனே முதுகுத்தண்டில் 'சில்' லென்று இருந்தது .

எந்த முயற்சியும் இல்லாமல் இன்று 'சுகப்பிரசவம்'

இதை எழுதி முடித்து விட்டு முதல் வரியை மறுபடி படித்தவுடன் கொஞ்சம் பயமாகக் கூட இருக்கிறது

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...