Friday, April 02, 2004

இரா.முருகன் அவர்களுக்கு ஒரு பாமரனின் பகிரங்கக் கடிதம்
===============================================


" ஞானபீட விருது பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாகப் படித்தேன்.

அனந்தமூர்த்திக்கு முன்னால் இந்த மாதிரித் தப்புத் தப்பாக சிந்தித்து அரசியல் அரங்கில் நுழைந்ததுமே க்ளீன் போல்ட் ஆன கன்னட எழுத்தாளர்கள் உண்டு. எண்பதுகளில், அனந்தமூர்த்தி போலவே ஞானபீட விருது பெற்ற இன்னொரு பிரசித்தமான கன்னட எழுத்தாளர் சிவராம கராந்த் உத்தர கன்னடத் தொகுதி ஒன்றில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினார். கய்கா அணுமின்நிலையத்தை எதிர்த்து இவர் ஆவேசத்தோடு பேசிப் பிரசாரம் செய்ததைக் கேட்க மேடையிலேயே ஆட்கள் இல்லை. இன்னொரு பிரசித்தமான கன்னடக் கவிஞரான பேராசிரியர் கோபாலகிருஷ்ண அடிகாவும் மாநிலச் சட்டசபைக்குச் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஜாமீன் இழந்தார்.

துரதிருஷ்ட வசமாக, அனந்தமூர்த்திக்கு அறிவுரை சொல்லித் தடுத்தாட்கொள்ள இந்த இருவரும் இப்போது உயிரோடு இல்லை. ஆனாலும் என்ன? இவர்கள் சார்பில் மத்தளராயன் தரும் ஆலோசனை இதோ -

அனந்தமூர்த்தி சார், எழுத்தாளன் எழுதறதோடு நிறுத்திக்கறதே நல்லது. மிஞ்சிப் போனா, வருடம் ரெண்டு இலக்கிய விழாவுலே மைக்கைப் பிடிச்சு சோடா குடிச்சு ஏப்பம் விட்டு நாலு வார்த்தை பேசலாம். மத்தப்படி அரசியல், கலையிலக்கியப் பிரக்ஞையைக் காத்திரமாக்குவது, சகலரோடும் தோளோடு தோள் சேர்ந்து நின்று இலக்கிய ஊடாட்டம் வெண்டைக்காய் வெங்காயம் ஒரு எழவும் வேணாம். "


எழுத்தாளர் இரா.முருகனின் திண்ணைக் கட்டுரையின் கடைசி பகுதிதான் நீங்கள் மேலே படித்தது. சமீபத்தில் நடந்த சம்பவங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட தொனி இதில் தெரிகிறது. சேட்டனுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்.

இத்தனை விஷயம் தெரிந்தவர், இத்த்னை விருதுகள் வாங்கியவர், இத்த்னை வயசு காலம் அலுவலக்த்திலும், தனி வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தவர், நடந்ததை எல்லாம் மறந்து விட்டு மறுபடியும் மடற்குழுக்களில் தொடர்ந்து எழுத வேண்டும். அவர் அங்கே எழுதாமற்போனாலும் அவரால் பட்டை தீட்டப்பட்ட எழுத்தாளர்கள் ரா.கா.கி யை தொடர்ந்து நடத்துவார்கள் என்று தெரியும். ஆனால் ஆறு லடசம் பேர் கூடி இழுக்கும் தேரில் உற்சவர் இல்லாதது போலத் தான் அது இருக்கும்.



இளைஞர்களை , இலக்கியம் ஆர்வம் மிக்க சிறுசுகளை , தடால் தடாலென்று காயப்படுத்தாமல், எல்லாரையும் ஊக்குவித்து, அவருக்கு இருக்கும் அதே கோபமும், வேகமும் , உணர்ச்சி வயப்பட்ட தன்மையும் அவரைவிட வயதில் குறைந்தவர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கும் என்பதையும் உணர்ந்து , மறுபடியும் மடற்குழுக்களில் எழுத ஆரம்பிக்க வேண்டும்.

இது முருகனால் பொருட்படுத்தப்படக்கூடிய "பெரிய" ஆட்களிடம் இருந்து வரவில்லை எனினும், ஒரு முதல்வரிசை விசிலடிச்சான் குஞ்சுவிடம் இருந்து வந்ததாய் அவர் பரிசீலிக்க வேணும்

சேட்டனுக்கு இதை தனி மடலில் எழுதி இருக்கலாம். ஆனாலும் பதில் தரும்போது போதுவில் தானே போடப் போகிறார் என்று நானே பகிரங்கமாக எழுதுகிறேன்.

என்றென்றும் அன்புடன்

சுந்தர்ராஜன்





No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...