=============
வாடிக் கிடக்கிறது முகம்
கவளம் கவளமாய் விழுங்கிய நீ
ஸ்பூன் ஸ்பூனாக கஞ்சி
குடிக்கிறாய்
உரத்து பேசி ஊர்மடக்கியவன்
மூச்சு விடவே திணறுகிறாய்
மலமும் நீரும் பிரிவது
உனக்குத் தெரிகிறரதோ இல்லையோ
எனக்குத் தெரிகிறது
அதையெல்லாம்
நான் துடைப்பது மட்டும்
உன் விசும்பலில்
எனக்குத் தெரிகிறது
வெடித்து அழாமல்
இன்னமும்
அழுத்தி வைத்துத்தான்
உள்ளுக்குள் கலைந்து போகிறாய்
ஊர் ஊராய் சுற்றியாகி விட்டது.
வைத்தியம் எல்லாம்
பார்த்தாகி விட்டது
குலதெய்வ பூஜையும்
சாமியார் விபூதியும்
வீடு கொள்ளா
மூணு பந்தி சனமும்
நீ பிழைக்க வேண்டி
இல்லை
என்பது தெரியுமா
உனக்கு..?
நாலு வால்வும் வலது
சிறுநீரகமும்
உதவாது போயிற்றாம்.
சிரமப்படாமல்
கம்பீரமாய் செத்துப் போ
என் பிரிய அப்பாவே..
உன் சாயலில்
உன்னிடம்
நான்
கேட்ட என் அவனை
நானே தேடுவேன் இனி
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
மாமன்னன் ----------------------------- மாரி செல்வராஜின் மாமன்னன் பார்த்தேன் உன் வயதை விட குறைந்த வயதுடைய ஒருவன் உன் தந்தையை ஒருமையில் அழை...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
No comments:
Post a Comment