Saturday, December 11, 2004

அலாரம் அடிக்கும் நகரம்

நகரம்


தனியே இருத்தி
தென்னோலை அடைத்து
உலக்கை உருட்டி
ஊருக்கும் உறவுக்கும்
சொல்லி
சல்லடைத் தட்டு வழியே
மஞ்சள் நீரூற்றி
பூச்சூடி
பட்டுடுத்தி
புட்டு சுற்றி
நலங்கு வைத்து
திருஷ்டி கழித்து
"படம்" காட்டும்
தமிழ் சினிமா
மலைப்பாய்த் தான்
இருக்கிறது
பள்ளி நேர அவசரத்தில்
விழுந்தடித்து ஓடி
ஒன்பது மணிநேர
கசக்கலிலும்
நெரிசலிலும்
மூச்சுத்திணறி வியர்வை வழிய
மாநகர போக்குவரத்துக் கழக
23-C பேருந்தில்
பூத்த
என் செல்லத்துக்கு....


அலாரம்

அதிகாலைக் குளிர்
எழுந்து அணைத்து
விட்டுத்
தூங்கினேன்.
அரை மணி கழித்து
பையன்...

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...