Saturday, December 11, 2004

இசைக்குயில் பறந்தது....

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\2004021500060302

சங்கீத மேதை டாக்டர் எம்.எஸ் மறைந்தார்கள் என்ற செய்தி கேட்டு தமிழ்நாட்டில் எத்தனை உள்ளங்கள் துடிதுடிக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. எண்ணிலடங்கா பட்டங்களும், ஏகப்பட்ட ரசிகர்களையும் பெற்றிருந்த அவர், தனக்கு இசை மூலமாக வந்த எல்லா செல்வத்தையும் அறக்கட்டளைக்கும் அனாதை இல்லங்களுக்குமே கடைசி வரை அளித்து வந்தவர். மதுரை ஷண்முகவடிவு சுப்புலட்சுமி என அழைக்கப்பட்ட அவர், கல்கி பத்திரிக்கையின் ஸ்தாபகர் திரு. சதாசிவம் அவர்களை மணந்து, அவருடைய மனமொத்த சகியாக இருந்து, ஐ.நா சபை வரை சென்று பாடும் பெரிய பேறு பெற்றிருந்தார்.

ஒரு சாயலில் இந்தக் கால ஐஸ்வர்யா ராய் போல இருக்கும் எம்.எஸ் அவர்களை ஸ்ரீ ரங்கபுர விஹாரா என்ற பாடல் மூலம் முதன் முறையாக அறிந்து கொண்டேன். என் தகப்பனார் இவருடைய சங்கீதத்தின் பரம் விசிறி. எம்.எல்.வசந்தகுமாரி, என்.சி.வசந்தகோகிலம், போன்றவர்களின் பாடல்களும் அவருக்கு பிடிக்கும் என்றாலும், எம்.எஸ் கச்சேரி கேட்கும்போது தன்னை மறந்து விடுவார். கச்சேரிகளின் போது, ஏகப்பட்ட அங்க சேஷ்டைகள், அலட்டல்கள், முகபாவ மாற்றங்கள் எல்லாம் செய்யும் இசைக்கலைஞர்கள் மத்தியில் எம்.எஸ் அம்மாவின் கச்சேரியை ஒளிப்பேழையில் பார்த்தாலும் அவ்வள்வு அருமையாக் இருக்கும். கண்களை மூடி, லயிப்புடன், பாடகி ராதாவுடன் அவர் சேர்ந்து பாடுவது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. காஞ்சி மகாப்பெரியவர் எழுதிய பாடல்கள் சிலவற்றை அவர் பாடியிருப்பதாக அறிகிறேன்.

பாவயாமி ரகுராமம், ஸ்ரீரங்கபுர விஹாரா, காற்றினிலே வரும் கீதம் போன்ற உருக வைக்கும் பாடல்கள் இருக்கும் வரையில் எம்.எஸ் அம்மாவின் ஸ்தூல சரீரம் போனாலும், அவர் இசையுருவம் எங்கள் நெஞ்சங்களில் நின்றாடும்.

அந்த இசைமேதைக்கு என் அஞ்சலி...!!

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...