Friday, December 03, 2004

இடைவெளி

முகமே தெரியவில்லை
முதல் முதலாய் பார்த்தபோது
முகடுகள் தெரிந்து விட்டால்
முகமெங்கே தெரிகிறது.

வெறித்துப் பார்த்தலில்
விவேகம் இல்லை என
பலவீனமாய் மூளை நினைவுறுத்த
மனசு மட்டும் இடைவெளியில்
தெரிந்த
தரிசனத்துக்கு சண்டித்தனம் செய்யும்

பேனாவுக்கு கை நீட்டியும்
பேச்சுக்கு புன் சிரித்ததிலும்
வணக்கத்துக்கு தந்த தலையசைப்பிலும்
பேர் சொன்ன அறிமுகத்திலும்
குறைந்தது
இடைவெளி மாத்திரமில்லை
கொஞ்சம் வெம்மையும் கூட

பழகவும் பேசவும்
பகிரவும் மலரவும்
இறகாச்சு மனசெனக்கு.
பேசாத விஷயம் அங்கே
ஏதும் மீதம் இல்லை
இப்போதெல்லாம்.
மணிக்கணக்கில்
பேசிப் பிரிகையில்
எங்காவது தெரிந்திருக்கலாம்.
ஏதும் விலகி இருக்கலாம்.

யாரதைப் பார்த்தார்கள்.

மனசும் மூளையும்
சேர்ந்திணையும் மாயாஜாலம்
தோழமை தந்த வரம்.

2 comments:

  1. Dear Sundar,

    Really superb kavithai! Last 3 lines must have come from the bottom of the heart, I trust. pArAttukkaL
    enathu 'veguNdu' siRukathaiyai patiththu vittu, ungkaL karuththukkaLai sollavum

    enRenRum anbudan
    BALA

    ReplyDelete
  2. அனுபவித்திருக்கிறேன். மீண்டும் எண்ணிப்பார்க்கவெச்சதுக்கு ஒரு தேங்க்ஸ்:)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...