Sunday, December 26, 2004

நீர்க்குமிழி வாழ்க்கை

நிலநடுக்கம் மற்றும் கடல் கொந்தளிப்பு செய்தி கேட்டு, இத்த்னை நேரம் மாயவரத்துக்கு தொலை பேச முயன்ரதில், சர்று நேரம் முன்புதான் பேச முடிந்தது. பெற்றோர் குரலில் பயத்தின் சுவடு. மாயவரத்திலிருந்து 27 கி.மி தூரத்தில் தரங்கம்பாடி மற்றும் பூம்புகார். அங்கிருந்து ஆக்கூர், சன்கரன்பந்தல் வரை தண்ணீர் வந்ததாக கூறினார்கள். ஆனால், கடல் தண்ணீர் இல்லையாம். பூமி வெடிப்பில் இருந்து பீய்ச்சி அடித்ததாக வதந்திகளாம். யாருக்கும் ஏது விவரம் என சரியாய் தெரியவில்லை. ஆனால் பீதியைத் தவிர்க்கும் பொருட்டு, செய்திகள் மழுப்பப்படுவதாக தெரிவித்தார்கள். நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகே வசிக்கும் என் உறவினர் - கடற்கரையிலிருந்து 4 கி.மி - பற்றிய விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை ட்ராக்டர்களிலும், லாரிகளிலும் ஏற்றிவந்து, பள்ளிகளிலும், கோவில்களிலும் தங்க வைக்கிறார்களாம்.

செய்தியை முதலில் தினகரன்.காமில் சிவப்பு வண்ணத்தில் பார்த்தபோது வீரியம் தெரியவில்லை. பிறகு தட்ஸ்டமில்.காம் கொஞ்சம் விரிவாகத் தந்தது.
முழு விவரம் பத்ரி ப்ளாக்கிலும் ராயர் காப்பி க்ளப் முருகன் மடலில் இருந்தும்தான் படித்தேன்.

என்னென்ன செய்திகள் கிடைக்கிறதோ, அதனை தமிழக நண்பர்கள், உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

மனசு கஷ்டமாக இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன செய்ய..??

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...