நடுத்தர வர்க்கக் கனவுகளை நனவாக்க
திரைகடலோடினாய்
உவகை கொண்டோம்
பழகுவோர் போற்றும்
கனிவு மிகக் கொண்டாய்
கருணையே மனித உருவெடுத்ததாய்
கடவுளுக்கு நன்றி சொன்னோம்
கண்டே இராதோர் கூட வியக்கும்
கல்யாணகுணம் உனக்கென்று
களிப்பு மிகவடைந்தோம்
செய்யும் சாதனைகளால் அடையாளம்
காட்டப்பட வேண்டுமென்று
திரைமறைவில் இயங்கிவந்தாய்
யாருக்கும் எதிர்ப்பு இல்லை என்பதனை
இறுதி மூச்சுவரை வாழ்ந்துவிட்டு
உறங்கியே மீளாஉறக்கம் கொண்டாய்
இறப்பிற்கு பின்னும் உன்னை
அவன் என்றே அழைத்து எழுதிய
நாங்கள் .......
கார்கோ டெலிவரியி(னா)ல்
அவன் வருவதில் தாமதம்
என்றெழுதும் போது கதறினோம்
சமுத்திரத்தை சதுரப்பெட்டிக்குள்
அடைக்கப் போகிறார்களாம்....
தானாய் வந்து இறங்கியவனை
பெட்டிக்குள் வைத்து
தள்ளிவரப் போகிறார்களாம்...
வரும்தோறும் பெட்டி திறந்து
எங்களுக்கெல்லாம்அள்ளித் தந்தவனை
பெட்டி திறந்து
கொள்ளி வைக்கப் போகிறார்களாம்
கடல் கடந்து உடல் வருவதாய்
சேதி வந்திருக்கிறது
உன் புனைபெயரின் மெல்லினம்
வல்லினமாகி உன் முடிவை
அறைகூவி இருக்கின்றது
ஒக்க மடிந்ததடி ஊடுருவ வெந்ததடி
கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆச்சுதடி
என்பனவெல்லாம்
மாளும் உடல்களுக்கு மட்டுமல்ல
உனைப் பிரிந்து வாழும்
உள்ளங்களுக்கும்தான் .........
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
மாமன்னன் ----------------------------- மாரி செல்வராஜின் மாமன்னன் பார்த்தேன் உன் வயதை விட குறைந்த வயதுடைய ஒருவன் உன் தந்தையை ஒருமையில் அழை...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
No comments:
Post a Comment