Friday, September 17, 2004

அம்மா...அம்மம்மா...

Jayalalitha

காலையில காப்பியோட
எழுப்பலையிண்ணா
வெந்நீரு மூஞ்சியில

பல்லு வெளக்க
ப்ரஷ்ஷை காணுமுன்னா
நாலஞ்சு தட்டுவாணி பட்டம்

குளிக்கையில துண்டு
வைக்கலைன்னா
உம்ம கொடிக்கம்பு
எம் முதுகு குத்தும்

வெள்ளைச் சட்டை
கொஞ்சம் பழுப்பானா கூட
உம்ம நாக்கு
பாம்பா கொத்தும்

இட்டிலி "பொசு பொசு" ன்னு
இல்லையின்னா
வட்டில் வந்து
எம் மூஞ்சு பேக்கும்

பகலு முழுக்க வேலை செஞ்சு
ஓஞ்சு கெடந்தா
ராவிக்கு வந்து
மறுபடியும் உசுரை வாங்கும்

அந்த ...

பாழாப்போன பாவி மனுசன்
கட்சி ஆபீசு போனா மட்டும்
கட்சி தலைவி "அம்மா" காலுல
"பொத்து பொத்து" ந்னு
விழுந்து எழும்புதாரு.
கையை, காலை
கட்டிகிட்டு
அசிங்கமா வாலாட்டுதாரு.

பழிவாங்குதுய்யா ஒன்னை
இந்த உலகமுன்னு
நெனைக்க ஏலாம
எம் பாவி மனசு பதறுதய்யா...

-

இப்படிக்கு

ஹேமமாலினி
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் மனைவி
சித்தாம்பூர்

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...