இளவரசிகள் அழகாக
இருக்கிறார்கள்.
செல்வத்தில்
மிதக்கிறார்கள்
எல்லா இளவரசிகளும்
ஸ்கூட்டி வைத்திருக்கிறார்கள்.
சோதனையாக அவர்களுக்கு
ஏழை வாலிபனைத்தான்
பிடிக்கிறது
வாலிபர்கள் கோழைகளாக
இருக்கிறார்கள்
ஆனால் ஆசை இருக்கிறது
அது கண்ணை மூடிக்கொண்டு
தேன் குடிக்கச் சொல்கிறது
கொஞ்ச நாள்.
மூழ்கியவர்கள்
"முருகன்" ஆகிறார்கள்
மீண்டவர்கள்
கவிதை எழுதுகிறார்கள்
ஹி..ஹீ..நேத்துதான் "காதல்" பாக்க ஆரமிச்சிருக்கேன்.
No comments:
Post a Comment