Tuesday, February 08, 2005

பசுவய்யா கவிதைகள்

வலைப்பூக்களின் வீச்சும் ரீச்சும் பல்கிப் பெருக்கொண்டிருக்கும் இந் நேரத்தில் கொஞ்ச நாள் படித்துக் கொண்டே இருந்ததில் வாய் பிளந்து கிடந்து விட்டேன். "ஒரு வாரம் ஸ்டாரானா, பத்து நாள் லீவா" என்று தனி மடலில் நங் என்று விழுந்தது ஸ்நேகத்திடமிருந்து ஒன்று.

மறுபடியும் மெல்லத் துவங்கலாம் என்று ஒரு எண்ணம்.

"கதவைச் சுண்டாதே தயவுசெய்து" என்று ஒரு கவிதையோடு

நான் இங்கு இருக்கிறேன்
இங்கு
இச்சிறிய அறையில், சிறிய சன்னல், சிறிது வெளிச்சம்

தயவுசெய்து உன் ஆள்காட்டி விரலின் நகத்தால்
சாத்தியிருக்கும் என் கதவைச் சுண்டாதே
எனக்கு உன் ஓசைகள் தெரியும்
உன்னைத் தெரியும்
உன்னிடம் எவ்வளவு என்பது தெரியும்

என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியைக் கட்ட கடைசி நாள் கேட்பாய்
பங்குகள் சரிவது பற்றி விசனமுடன் பேசுவாய்
தொலைபேசி எண் என்ன என்பாய்

கையாலாகாதவன் என என்னைச் சொல்லாமற் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும் பாரம் சரித்துவிட்டுப் போவாய்

ஒரே ஒரு கவிதை
போதும் இந்த ஜன்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்துக் கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலில் நகத்தால் என் கதவைச் சுண்டாதே
தயவுசெய்து

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...