Tuesday, January 05, 2010

திருப்தி





உன்னை இழந்ததில்
தனியனானேன்
கடியனானேன்
குடியனானேன்;
காமுகனானேன்
கவிஞனானேன்
தாடியோடு நீள
சிகை வளர்த்தேன்
புகையூதினேன்
கடிதானேன்
துடிப்பானேன்;
த்டியெடுத்து வாழும்
துணிவுமிகக் கொண்டேன்
அரசியல் செய்தேன்
மணம் துறந்து கனிவெய்தி
சகலரையும் நேசிக்கும்
காருண்யனானேன்
ஒற்றை வாழ்க்கையில்
நூற்றுக்கணக்கில் பிறந்தழிந்தேன்
இப்படியாக.
உன் நினவுகளோடு
பழகிய நாட்களின் நறுமணத்தோடு.
நீ கிடைத்திருந்தால்
உன் குழந்தைகளுக்கு தகப்பனாகி
ஓய்ந்திருப்பேனோ..?

2 comments:

  1. அடடே ! அடடே !!! :)

    ReplyDelete
  2. இதுக்கு ஏன் இத்தனை டே..? :-)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...