Thursday, October 21, 2010

கேவல்கள்


இழந்த காதலிகள்
திரும்ப கிடைத்தாலும்
இழந்ததின் சோகம்
தீர்வதில்லை...
இன்னமும் சில பாடல்களினை
கேட்கும்போது
தன்னிரக்கத்தில்
கண்ணீர் சுரக்கிறது
சமயங்களில் தேடப்பட்டவள் இவள்
இல்லையோ என
சந்தேகப்படும் அளவுக்கு.. !!
பதட்டத்தில்....
பயணத்தில் எதிர்கொண்ட
பல தென்றல்களை
மனம் பரபரவென்று புரட்டியபிறகு
புரிகிறது
தேடப்பட்டவள் கிடைத்தாள்
ஆனால் தொலைந்தவளாகவே
கிடைக்கவில்லை
நட்பு காதலாவது சாதாரணம்
காதல் நட்பாவது சதாரணம்

1 comment:

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...