Wednesday, May 23, 2018

இன்னா நாற்பது ....

 

மீசை நரை போக்க
பொறுமை ஏகம் தேவைப்பட
ஆசை நுரை மட்டும்
சுழித்துப் பிரவகிக்கிறது
இன்னமும்....
யோசித்துக் களைத்த மூளை
கொஞ்சம் உருகியும் வழியவே
பின்னுச்சியில் சூரிய உதயம்...
இணையாய் இருந்த மனைவி
துணையாகி... தூணாக
வெளிச்சத்தில் சிரித்துக் கொண்டு
விட்டம் பார்த்து விடிகாலை
இருட்டில் யோசனைகள்.....
மாரடைப்பில் ஏகும் அகாலர்களை
நினைக்கையில் மட்டும்
பயம் வருகிறது,
கொஞ்சம் சுயம் அழிகிறது!!
பருவம் எட்டிப் பார்க்கும்
பதின்மர்களைப் பார்த்தால்
கொஞ்சம் பாவமாகவும்
கொஞ்சம் கோபமாகவும் இருக்கிறது.
பணம் எவ்வளவு இருந்தாலும்
மனம் மட்டும் எதன்பொருட்டோ
கலங்கிக் கொண்டே இருக்கிறது.
அகவை நாற்பது என்பது
அகத்துக்கும் தெரிகிறது.
அவனிக்கும் தெரிகிறது.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...