Wednesday, June 13, 2018

காலா - இருளும் ஒளியும்


இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவையும் பயன்படுத்த வேண்டியதில்லை.. அல்லது பேசாமல் அரசியலில் குதித்து தொல். திருமாவுக்கு உதவலாம். அல்லது முழு நேர எழுத்தாளர் ஆகலாம். அதீத ஆர்வக் கோளாறு .. பாவம்.  

கபாலியில் கதையும் கொஞ்சம் சேர்த்து பிரசாரமும் இருந்தது. இதில் 70 விழுக்காடு பிரச்சாரமும், கொஞ்சமே கொஞ்சம் மற்றதும் ஆனால் ரஜினியை உபயோகப்படுத்திய காரணத்திற்காக மோடி பக்தாளை எல்லாம் இதற்கு முட்டு கொடுக்க வைத்திருப்பது .. சூப்பர்.

ரஜினிக்கு இந்தப் படம் நல்ல பயன் அளித்திருக்கும் - தூத்துக்குடியில் அவர் ஹரிதேவ் அப்யங்கர் போல பேசாமல் இருந்திருந்தால். :-)

மற்றபடி ரஜினி பார்ப்பதற்கு சூப்பராக இருக்கிறார். நம் வீடுகளில் இருக்கும் குறும்புக்கார தாத்தாக்களை நினைவு படுத்துகிறார். சில காட்சிகளில் மிக இயற்கையாக ஸ்கோர் செய்கிறார்.
சில காட்சிகளில் முகபாவங்கள் ஒத்துழைக்காமல் சங்கடப்படுத்துகிறார். மொத்தத்தில் இப்பேர்ப்பட்ட ஆளை அரசியலுக்கு காவு கொடுத்து விட்டோமே என்று வருந்த வைக்கிறார்.  ஈஸ்வரி ராவ், நடிப்பதற்கு ஏதுவான பாத்திரம். தூள். ஹ்யூமா குரோஷி அந்தளவு ஒட்டவில்லை. மற்றபடி அந்தப் பெரிய குடும்ப பட்டாளத்தில் ஒட்டுவது கனியும், கண்டனும். என்னதான் மணிகண்டன் ( லெனின்)  என்.ஜி.ஓ மூலமாக தாராவியை புதிதாக்க முயன்றாலும், பின்னணியில் நாநா (ஹரிதேவ்) இருப்பது  தெரியாமாலா இருப்பார். ரஞ்சித்தின் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் அரசியல் அறிவும், விவேகமும் இவ்வளவுதானா?

நானா படேகர் அற்புதம். பாலா சாஹேப் அவர்களை நினைவுபடுத்தும் முயற்சி. அருமையான நடிப்பு. சில காட்சிகளில் ரஜினியை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுகிறார். முக்கியமாக ஈஸ்வரி//செல்வம் முடிவுக்கு பிறகு, காலா அவரை அவர் வீட்டில் சந்திக்கும் காட்சியில்  நானா பேசும் வசனங்களும், பாடி லாங்வேஜும் - முதுகுத் தண்டு சில்லிட்டு விடுகிறது. அவருடைய பாத்திரப்படைப்பு ( casting and costume) முழுக்க அவரே வடிவமைத்ததாக கேள்வி. பலே...

அஞ்சலி பாட்டீல் கொஞ்சம் over hyped. ஆனால் அவருடைய மராத்தி என்னுடைய பம்பாய் நினைவுகளை கிளறி விட்டது. அந்த வகையில் நன்றி.. கமலின் ஹேராம் வந்த போது இது தமிழ் படமாகவே இல்லை. ஏகப்பட்ட மொழிகள் கலந்து சாதாரண  சினிமா ரசிகனுக்கு புரியவில்லை என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள். Are they domesticated now by Masthaan ji? :-) 

ரஞ்சித் முதலில் தான் யார். தன் முக்கிய நோக்கம் என்ன என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும். தன் பிரசாரங்களுக்கு சினிமா மீடியாவை இந்தளவு பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தயாரிப்பாளர் தலையில் துண்டுதான் போட வேண்டும் லட்டு மாதிரி தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை இப்படி ஓவராக பிரசாரம் பேசி கடுப்பேற்றினால மறுபடியும் திருநின்றவூருக்கு டிக்கேட் எடுக்க வேண்டியதுதான். சினிமாவில் முதலில் கலை/craft முக்கியம். அப்புறம் தான்   மெசேஜும் மற்ற புடலங்காயும். நல்ல parallel cinema எடுக்க அவர் சீக்கிரம் கற்றுக் கொள்ளட்டும். அதற்கு தமிழ் சினிமாவில் ஏற்கனவே நல்ல முன்னுதாரணங்கள் உண்டு. அவரை ஏத்தி விடுகிறவர்களை பார்த்து ஏமாந்து போகாமல்  சீக்கிரம் விழித்துக் கொள்ள வேண்டும்.
காலா  - கொட்டாப்புளியால் கொசு அடித்திருக்கிறார்கள் :-(

2 comments:

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...