Wednesday, January 10, 2007

நிஜ ரோஜா ரதிதேவி

கலைஞர் டீ.ஆர்.பாலு மூலமாக பேசுகிறாராம்...

வை.கோ சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மூலமாக பேசுகிறாராம்.

சிவராஜ் பாட்டீல் அஸ்ஸாம் காவல்துறையுடன் பேசுகிறாராம்.



ஆச்சு. பதினெட்டு நாள். சிவகாசி கரிசல்குளம் கணேசன் குடும்பம் அல்லாடிக் கொண்டு இருக்கிறது. குடியரசுத் தலைவர் அண்ணனுக்கு மனு கொடுக்க (?!!!)ராமேஸ்வரம் போகிறார்கள். குழந்தைகளுக்கு பதில் சொல்லி மாளவில்லை. செல்போனில் பேசும் தீவிரவாதிகளுக்கு பேசவும், அந்த தகவலை கணேசனின் உயரதிகாரிகளுக்கு தரவும் நேரம் சரியாக இருக்கிறது. பிணைத்தொகை மூணு கோடி. என் சகோதரியின் கணவர் சந்திரஹாசன் கணேசனின் உயரதிகாரிகளுல் ஒருவர். கடந்த பதினைந்து நாட்களாக அவர்கள் யூனிட்டே அல்லோலகலோலப் பட்டுக் கொண்டிருக்கிறதாம்.



எல்லா எழவும் போகட்டும். என்ன சித்தாந்தத்துக்காவது அந்த தீவிரவாதிகள் போராடிக் கொள்ளட்டும். அதுக்கு ஒரு அப்பாவி சிவில் இஞ்சினியர்தான் தான் கிடைத்தானா..?? பணம் வேணுன்னா பாங்க்கை கொள்ளையடி. ஏதாவது பெரிய அரசாங்க பதவியில் இருக்கிற அரசியல்வாதியைக் கடத்து. அவனுக்கு இருக்கிற பவர் கொஞ்சம் மீடியா வெளிச்சமாவது கொண்டுதரும். ஒரு கருமமும் இல்லாம ஒரு செமி ராணுவ ஆசாமியை பிடிச்சு வச்சுகிட்டு, கோடி கோடியா கேட்டா எங்க போறது. அரச இயந்திரத்தோட ஒரு கடைகோடி பல்சக்கரம் மாட்டிக்கிச்சுன்னு எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணப் போறாங்க. ரோஜா மாதிரி ஒரு படம் நல்லா ஓடிச்சுன்னா நாமல்லாம் நல்லா கை தட்டிப் பாக்கலாம். வேற ஏதாச்சும் முடியுமோ..??

விடை தெரியாத கேள்விகள்...

1 comment:

  1. இயலாத, ஒன்றுமறியாப் பொதுமக்களைப் பிணையாக்கும் தீவிரவாதம் என்றுதான் ஒழியுமோ ? :((

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...