Saturday, June 19, 2010

மணிராவணன்


விக்ரம் - அட்டகாசமான நடிப்பு. ஆண்மையும் வெறியும் நிரம்பிய பாத்திரத்தில் காதலும், சற்றே காமமும் அம்சம்

சந்தோஷ்சிவன்/ மணிகண்டன் - அருமை. தியேட்டருக்குள் தண்ணீரில் ஊறிய பச்சை இலை வாசனைகள் அடிக்கும் அளவுக்கு தரமான ஒளிப்பதிவு. கொஞ்சம் அதீதமான அழகுணர்ச்சியக் குறைத்திருந்தால் கதை மேலேறியிருக்கும்.


ஐஸ் - வயசானாலும் ஐஸ் ஹாட். சொந்தக் குரலாம். பரவாயில்லை. எஸ்.பி யின் மனையாளாக இலக்கணம் மாறாமல் பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து, அழகு ஆன்டியாக வந்து போகிறார். எத்தனை பதவிசாக இருந்தாலும் எல்லாப் பெண்களுக்குள்ளும் இருக்கும் காட்டுச் சிறுக்கியை வெளியே அவ்வப்போது உலவ விட்டு உள்ளே அனுப்புகிறார். வீரய்யாவைப் பார்க்கும் அவரது பார்வையில் ஏற்படும் மாற்றங்களினை மணி மெல்ல மெல்ல வெளியே கொண்டு வந்திருப்பது - நச்.

ப்ருத்விராஜ் சரியான NPK. இதை வைத்து இன்னம் எத்தனை ஆட்டம் போடப் போகிறாரோ. கனாக்கண்டேன் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கவே இல்லை. ப்ரியாமணி கொஞ்சம் வந்தாலும் கச்சிதம். அண்ணன் கூப்பிட, கல்யாண மருதோன்றியோடு அந்தக் குண்டுக் குயில் “யாங்” என்று கூவும்போது கண்ணில் பூச்சி பறக்குது. பிரபு/ கார்த்திக்கை இந்தப் படத்தில் பார்க்கும் போது அந்த நாள் அக்கினிநடசத்திர ஞாபகங்கள் வந்து போயின. முதுமை கொடிது.

சுஹாசினி- சுஜாதா(த்தா)வின் அருமையை, அவர் இல்லாத வெறுமையை உணர வைத்திருக்கிறார். புது பேனா வாங்கி இருப்பார் போலிருக்கிறது. குடம் குடமாக இங்க் ஊத்தி வள வளத்திருக்கிறார். மணியின் எடிட்டிங்கால் நம் தலை தப்பியது. “ உன் பொண்டாட்டிக்காவே உன்னைக் கொல்லலாம்.அவளுக்காகவே உன்னைக் காப்பாத்தலாம்” என்று விக்ரம் பேசுகிற கிளைமாக்ஸ் வசனம் மட்டும் ”அட” . ராமாயணத்தை பார்வையாளர்களுக்கு புரிய வைக்க வசன ரீதியாக அவர் எடுத்திருக்கிற முயற்சிகள் சிறுபிள்ளைத்தனம். மணி ஜெயமோகனையோ, எஸ்.ராவையோ முயன்றிருக்கலாம்

இசை - வழக்கம்போல ரஹ்மான் பாட்டுக்கள் கேட்க கேட்கத்தான் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

மணி - டிபிகல் மணி படம். படமாக்கம், பாணி, ஸ்டைல் பளிச். சிட்டி பையன்களுக்காகவே படம் எடுக்கிற பார்ட்டி, இப்போது non-stick cookware ல் ப்ரியாணி பண்ணியது போல ராவணனை எடுத்து இருக்கிறார். வெகு மக்கள் ரசிப்பதற்காக, அவர்கள் விருப்பத்திற்காக, ராமாயண வில்லனை தன் நாயகனாக ஆக்கி கல்லா கட்டியிருக்கும் நுண்ணரசியலை அறிவு ஜீவிகள் எழுதிக் கொள்வார்கள். நமக்கு ஒரு வெள்ளிக்கிழமை மாலை, முதல் ஷோ, சாக்ரமண்டோவில் Big Cinemas புண்ணியத்தில் இஷ்ட மித்திர பந்துக்களுடன் சுகமான பொழுதுபோக்கு. கமர்ஷியல் கட்டாயங்கள் இல்லாமல், லோ பட்ஜெட்டில் இளம் நாயக/ நாயகிகளுடன் அவ்வப்போது Classics வகை படங்களையும் அவர் முயற்சி செய்ய வேண்டும். வேறு பாணிகளில், வேறு format களில் பரிட்சித்துப் பார்க்க வேண்டும். சரக்கு இருக்கு. ஆனால் காந்தித் தாத்தா சிரிக்கிறார். பாவம் Moneyரத்னம்

1 comment:

  1. Hi i have seen ur post on ms subbu lakshmi.. dou have Mp3 versions of those songs with u.. i mean sriranga puravihara , pavayami raguramam, pavayami gopala pavam... if so can u share that with me...pls

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...