Wednesday, October 14, 2015

கடவுள் பிறந்தார்

உழைக்க அஞ்சா அவனுக்கு
எனைப் போலவே முன்கோபம்...
ஓடி ஓடி பொருளீட்டியோனை
மூடிமூடி இறுக்கிக்கொண்ட 
கருமி என்றனர்
எனை தூற்றுதல் போலவே....
பெண்டிர்க்கு பிரியனாய்
இருந்தவனை ஸ்தீரி லோலன்
என்றனர் நான் வெட்கி நிற்க...
சமய சந்தர்ப்பமறியாது
உரத்த குரலில் வாய்வீசுவான்
என்றனர் என்னை
கேலி செய்தல் போலவே....
சுற்றிச் சுற்றி வந்தாலும்
சுயநலமே கருத்தானவன்
என்று இடித்துரைப்பர்
எனை வைதல் போல்...
நன்றி மறவாதவன்
நாவன்மை கொண்டோன்
நாருசிக்கு அடிமையானவன்
சமையலில் வித்தகன்
தமிழ்க்காதல் கொண்டோன்
இறை பக்தியுள்ளோன்
என நான் முகம் பார்க்கும்
கண்ணாடியாய் அவன் குணங்கள்..
என்னைப் போல பாடும் தொண்டையும்
என்னை போல சிற்றின்ப பிரியனும்
என்னைப் போல் வாயுக் கோளாறும்
என்னைப் போல பேழை வயிறுமான 
என்னை படைத்தவனை...
அமரனான  எந்தையை அன்றியும் ...
அணுக்கமாய் உணர
எனக்கு இனி இறையுண்டோ
இப் பிறப்பில்...
நடுகல் நட்டு முன்னோரை
வணங்கும் தமிழ்வாழ்வு
இந்த நூற்றாண்டிலும்
தொடர்கதையாய்........

2 comments:

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...