Sunday, September 30, 2007

மணம் பரப்பும் மல்லிகை மகள்

படிக்கும்போது பெருமிதமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.


நண்பர் ம.கா.சிவஞானத்தைப் பற்றி என் வலைப்பதிவுகளில் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். என் கல்லூரி சீனியர். விகடன் மாணவப்பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்திலும் சீனியர். சென்னைக்கு காலடி எடுத்து வைத்து நான் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் 51, அழகர் பெருமாள கோயில் தெரு, வடபழனியில் தன் அறையில் இடம் கொடுத்த சென்னைவாசத்திலும் சீனியர். இப்போது தன் கனவுப்பூவை மலரவிட்டு "மல்லிகை மகள்" ஆக்கி இருக்கிற இமாலய தன்னம்பிக்கையிலும் சீனியர்.



சல்யூட் தலைவா......!!





இனியர் ம.கா.சி இத்தனை வருடங்களாக விகடன் குழும பத்திரிக்கையான
"அவள் விகடன்" பொறுப்பாசிரியராக இருந்தவர். சொற்பங்களில் இருந்த பத்திரிக்கையை தன் முயற்சிகளின், புதுப்புது எண்ணங்கள் மூலம் லட்சங்களில் உயர்த்தி பத்திரிக்கையுலக ஜாம்பவான்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். இப்போது "மல்லிகை மகள்" என்ற பெண்கள் பத்திரிக்கையை நண்பர்களின் துணையுடன் துவங்கி இருக்கிறார்.



முதல் இரண்டு இதழ்களை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. மிக ஸ்நேகமான ஒரு உணர்வைத் தந்த முயற்சி. மிக பாசிட்டிவான எழுத்துக்கள். வித்தியாசமான தலைப்புகள் என்றாலும் " அவள் விகடன்" போல இருக்கிறதே என்ற உணர்வும் வந்தது. உருவத்தில் மூத்தவளைப் போல இளையவளும் இருப்பது பெற்ற தாயின் கையிலா இருக்கிறது..?? ஆனால் வேறு விதமாக வளர்க்கலாம்.


நண்பருக்கு அது தெரியும்.


மல்லிகை மகள் உங்கள் படைப்புகளுக்காக காத்திருக்கிறாள். அனுப்பி வையுங்கள். அச்சு உலகில் "நச்" என்று முத்திரை பதியுங்கள்



இப்போது மல்லிகை மகளுக்காக ஒரு வலைப்பூ துவங்கி இருக்கிறார். ஆனால் முழுமையான இணையத்தளத்தில் மல்லிகை மகள் மணம் வீசி நடை பழகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. உங்கள் எண்ணங்களை அவருக்கு எழுதுங்கள்.

2 comments:

  1. Anonymous11:41 PM

    மனமார வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  2. பிரகாசு,

    பத்திரிக்கை பார்த்தீரா..?? புடிச்சுருக்கா..?? எல்லாம் சென்னைக்கார ஆளுகளாச்சே. மல்லிகைப் பக்கம் ஒரு தபா எட்டிப்பார்க்க டயம் இருக்கா..??

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...