Monday, October 03, 2005

இனி என் முறை

செயலாய் இருந்த
சின்னவனுக்கு
கிட்னி பழுதாகி
அல்பாயுசு

அவனுக்கு நேர்
இளையவளுக்கு
மாரிலே வந்த கட்டி
கான்சர் சனியனாகி
உயிருரித்தது

பிரஷர் மாத்திரை தின்றே
வயசில் பாதிபோச்சு
இன்னோர் தமையனுக்கு

பெரியவருக்கு மார்ச்சளி
அடுத்தானுக்கு சர்க்கரை

என்னோடு ஒத்துப்பார்த்தால்
அப்பிராணி எல்லாருக்கும்
ரோகமே சோகமாக
காரணங்கள் தேடியே
மூளைக்குள் முடிச்சாகி
ஆண்டுகள் ஓடிப்போச்சு.

எனக்கும் ஏதோவந்து
படுக்கையில் கிடந்தகணம்
கிடக்காமல் பரக்காமல்
கொண்டு போய்ச்சேரப்பா
என்னையும் வாட்டாதே
என்றுனை வேண்டிநிற்க

காலம் இத்தனையும்
நமக்கென்ன காத்திருக்கோ
என்று கவலையோடே
அலைந்தாயே
வா வந்துசேர்....
அதுபோதும் உனக்கென்று
மர்மமாய் புன்னகைத்தான்.

1 comment:

  1. mmm kavithai yellam ezhutha arambichuteenga..periya aalaiteenganu sollunga
    Dubukku | Email | Homepage | 10.07.05 - 5:03 am | #

    --------------------------------------------------------------------------------

    யப்பா டுபுக்கு,

    "எல்லாம்" ஆரமிச்சதே கவிதைலதான்..
    இப்ப வந்டு சொல்றியெ...யெ..( திரிசூலம் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)
    மூக்கன் | Email | Homepage | 10.07.05 - 9:11 am | #

    --------------------------------------------------------------------------------

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...