Tuesday, June 14, 2005

புருஷன்

என்ன பிடிக்கவில்லை
என்று கேட்கிறாய்
என்ன சொல்வதென்றும்
எத்தனை சொல்வதென்றும்
யோசித்து மாய்கிறேன்

சத்தம் வர மெல்வதையும்
பல்கறையுடன் சிரிப்பதையும்
சங்கீதம் அணைத்துவிட்டு
அசட்டு நாடகத்தை
ரசிப்பதையும்
நீர் தளும்பகீழ் சிந்திய
நம் செல்வத்தின்
கண்நீர் சிந்த வெளுப்பதையும்
சேற்றிலே கை வைத்து
சாந்துக்கு குழைப்பதுப்போல்
சோற்றிலே உழப்புவதையும்
நின்றுகொண்டே நீரொழித்து
கழிப்பறை கோலமிடுதலையும்
அக்குளைச் சொறிந்துகொண்டே
அடுக்களைக்குள் வருவதையும்
அயலார் முன்னிலையில்
அநாகரீகமாய் நடப்பதையும்
ஏகத்துக்கு மதுவருந்தி
இரவெலாம் உளறுவதையும்
ஊர்மேய்ந்து நீ வர
அதுவே உள்ளிருக்கும்
எனக்கும் விருப்போவெனும்
குற்றக் குமைச்சலில்
எனை சீண்டுவதையும்
கேட்கவே பிறந்தோன் போல
கூசும் கேள்வியாய் கேட்டு
வாய் வீசுவதையும்
மெல்லிய உணர்வெதுவும்
இல்லவே இல்லாமல்
ஆண்மை என்பதை
முரடு என்று மொழி பெயர்க்கும்
என் அசட்டு ஆம்பிளையே...

கேள்வியாய் கேட்டுவிட்ட
ஓவென்று உன் கதறலில்
இருக்கச் சம்மதித்தவளை
முன்னிலும் வேகமாய்
வெறியோடு பின்னிரவில்
புணருமுன்னை கண்டெனக்கு
ஆயாசமாய் இருக்கிறது.

நானென்ன வெறும் துவாரமா..?
எனில் நீ எதற்கு ஆறடியில்

2 comments:

  1. //நானென்ன வெறும் துவாரமா..?
    எனில் நீ எதற்கு ஆறடியில்//

    நியாயமான கேள்விதான்

    ReplyDelete
  2. நன்றி பிரகாஷ்.

    மிஸ்டர் ரம். என்னய்யா பேரு இது. கூப்படற்துக்கே கொஞ்சம் கூச்சமா இருக்கு. பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...