Thursday, May 27, 2004

வசூல் ராஜா ...??
=================

"அவ்வையார் குதிரை ஏறணும்னு நினைக்கலை. அவங்க கவிதை ஏறினாங்க. அதுனாலதான் அவங்கள நாம இன்னம் பேசறோம்" என்று மதன்/கண்ணண் பேட்டியில் கமல் சொன்னதாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் அடிமனசில் அவருக்கு வசூல் சக்கரவர்த்தி ஆசைதான் அலைமோதுகிறது போல.

p14


முன்னா பாய் M.B.B.S , வசூல் ராஜா M. B.B.S ஆகிறது தமிழில். பெயர் வைக்க ஆசைப்பட்டவர்கள் ஏன் இம்மாதிரி பெயரிட்டார்கள் என்று தெரியவில்லை. தெலுங்கு பட டைட்டில் கெட்டது போங்கள்..!!! கமல் என்கிற மாபெரும் கலைஞனே ஜீவிக்கறதுக்கு, தான் வசூல் மன்னன் என்கிற கட்டாயத்தில் இருந்தாகணுமா..??என்ன குறை அவருக்கு...?? பணத்துக்கு பணம், படத்துக்கு படம், அப்பப்ப புதிய ஸ்நேகிதிகள், டைட்டில் கார்டில் பேர் மட்டும் போட்டுகிட்டு பேசாம வந்துபோக டைரக்டர் பொம்மைகள், அவர் பரிசோதனை முயற்சிகளுக்கு பணம் செலவு பண்ண தாணு மாதிரி தயாரிப்பாளர்கள்....

இத்தனை வயசுக்கு அவருக்கு ஆக்ஷன் ஹீரோ, வசூல் மன்னன் ஆசையா..??

சகலகலாவல்லவனில் குட்டை பெஞ்சு சுற்றியதிலும் வேறு பல படங்களில் ஏற்றுகொள்ள முயற்சி செய்த ஆக்ஷன் ரோல் எல்லாம் பொருந்தாமல் போனது அவருக்குத் தெரியுமில்லையா..?? என்னைக் கேட்டால், நடிகராக அவர் இருந்து சாதித்ததைவிட இயக்குநராக அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இப்படி ஒரு ஆசாமி, அன்பே சிவத்தையும்,குணாவையும், மகாநதியையும், தேவர் மகனையும், நாயகனையும் குடுக்கறதை விட்டுட்டு, எதுக்காக இந்த மாதிரி வசூல் முயற்சிகளில் இறங்குகிறார்.வசூல சக்கரவர்த்திகளுக்கு இருக்கக்கூடிய அரசியல் அபிலாஷைகளும் ஸாருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

ஏன்...ஏன்..ஏன்..???

இதற்கெல்லாம் ஆசைப்படவேண்டாம் கமலஹாஸா...ஒழுங்காய் உன் வேலையைப் பார்..!!!!!!!


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...