Monday, November 08, 2004

வாசகன் படுத்தும் பாடு

காலையில் இருந்து படித்துக் கொண்டே இருக்கிறேன். ஆபிசிலும் வெட்டி முறிக்கிறார் போல வேலை ஒன்றுமில்லை. மடலாடற்குழுக்களில் இருந்து, கவனிக்க மறந்த நல்ல பதிவுகள் வரை, ஒரே படிப்புதான். ராயர் காப்பி க்ளப் களைகட்டி இருக்கிறது. கொலட்கரின் கவிதைகளை மொழிபெயர்த்து இரா.மு வரிசையாக இட்டுக் கொண்டு இருக்கிறார். தியோ வான்காவை பற்றி ஒரு திரி கிளம்பி வழகமான பாட்டையில் ஓடிக் கொண்டிருக்கிறது. பொடிச்சியின் பதிவை முழுக்க படித்து முடித்தேன். அம்மணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அந்த வலைப்பதிவிலும் சரக்குக்கு குறைச்சலில்லை. தொடர்ந்து படிக்கலாமெண்டு ...ஸாரி..படிக்கலாமென்று ஒரு உத்தேசம். ரா.சுப்புலட்சுமி முக்காட்டை விலக்கிய நேரத்தில் இந்த வீரலச்சுமி.....!! பாரா அடித்த கமெண்டில் இருந்த /- குறியை பதிவெங்கும் தேடிப்பார்த்தேன். அது, அந்தக் கமெண்டுக்கு பிறகு அழிக்கப்பட்டிருந்தால், அது அவரோ...? :-). இருக்கலாம். யார் கண்டது...!!

மக்கள் இப்படி தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும்போது, நாமளும் என்னத்தையாவது எழுதணும் என்று தோன்றவே இல்லை. உள்ளுக்குள் இருக்கும் வாசகன் " பொத்திக்கிட்டு பேசாம படி முதல்ல " என்கிறான். சுத்திச் சுத்தி எழுதனதையே திரும்ப திரும்ப என்னத்தை எழுத...

தளும்பினா ஏதும் எழுத வாய்ப்பிருக்கிறது. இல்லாவிட்டால், பின்னூட்டங்களில் சந்திப்போம்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...