Tuesday, September 20, 2005

பலாப்பழம் - இதயக்கனி..??


சந்தேகமே இல்லை. அரசியலில் கண்டிப்பாக ஜெயித்து விடுவார்.

இதுவரை கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகங்களையும் எல்லாரும் களைந்து விடலாம். பின் என்ன..?? பண்ருட்டி ராமச்சந்திரன் அ.கொ.தீ.....ச்..சீ.. தே.மு.தி.கவில் இணைந்து விட்டாராம்..!! அதிமுகவில் எம்.ஜி.ஆர் சகல செல்வாக்குடன் இருந்த காலகட்டங்களிலேயே டெல்லி வேலைகளுக்கு பண்ருட்டியாரைத் தான் நம்பி இருந்தாராம். திமுகவுக்கு நாஞ்சில் மனோகரன் போல, அதிமுகவுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் என்று சொல்லப்பட்டது அந்தக் காலத்தில்.

அது சரி..ஊழலை ஒழிக்கப் புறப்பட்டிருக்கும் நம்ம கப்பித்த்தான் எதற்கு பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கிறார்..?? காரணம் ரொம்ப சிம்பிள். எதை (கி)ஒழிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தாலும், முதலில் அரசியல் தரகர்கள் - பச்சையாக புரோக்கர்கள் - முக்கியம். பவுடர் மூஞ்சிகளை வைத்துக் கொண்டு வசனம் பேசலாமே ஒழிய பாலிட்ரிக்ஸ் பண்ண முடியாது என்பது கப்பித்தானுக்குத் தெரியும். இதே காரணத்துக்காகத்தான் "காலத்தின் கட்டாயம்" புகழ் ஆர்.எம்.வி சூப்பரை சூடேற்றிக் கொண்டிருந்தார். அவரை நம்பியதற்கு இவரை நம்பி இருந்தாலாவது.......பொறுங்கள் ...... பொறுங்கள்..பவுடர் மூஞ்சிக்குப் பின்னிருந்து அரசியல் செய்த- செய்கின்ற அத்தனை அரசியல் அநாமதேயங்கள் எல்லாம் இவரிடம் தான் கடசியில் வருவார்கள் போல.

இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராம். நாட்டை மாத்தப் போறாராம். !!!

ஹெஹ்..ஹெஹ்..ஹே...!! தமிழனின் தலையத் தடவ இன்னொரு சந்தன வியாபாரி.

1 comment:

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...