Friday, July 16, 2004

இந்தியா ஒளிர்கிறது
==================
 
    பிள்ளைகறி கேட்டிருக்கிறார் கடவுள். வாரிக் கொடுத்துவிட்டு, மறந்துபோக மற்றொரு விபத்து. எரிந்த தீ ஜுவாலையில் எத்தனை கலாம்களோ..?? எத்தனை சிதம்பரங்களோ..??  கரிக்கட்டைகளாய் கிடக்கும் இந்தியாவின் பிஞ்சுகளை உலகம் அதிர்ச்சியோடு பார்க்கிறது. புத்தகம் வாங்கவும், இலக்கியம் படைக்கவும் முனையும் எம்மில் எத்தனை பேருக்கு ஓலைக்கூரை பள்ளிகளை காங்க்ரீட் கட்டிடமாக்க சித்தமிருக்கிறது..??
 
 முதல்வர் ஜெ பள்ளிகளுக்கெல்லாம் ஓலைக்கூரை மாற்றும் திட்டம் கொண்டுவருவாரா..அல்லது மதிய உண்வுக்கான சமையறைளை பள்ளியினின்று விலக்கி கட்டப்போகிறாரா..
 
எழுத வேறொன்றுமில்லை..உள்ளே ஓலமிடுவதைத் தவிர... 
 

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...