======
முகமூடி கிழித்து
முகமது பார்த்தால்
முகமே தேவலை
என்று தோன்றுமோ
இருப்பினும்
எந்த வதனம் எதிர்வந்தாலும்
முகத்திரை மெலிதாய் அசைவதேன்..?
உடனே கிழித்து எறிந்திட
கைகளும் பரபரப்பதேன்..?
விடு.
முகமூடியில்லா முகம் என்பது'
குழந்தையின் வசமின்றி எங்குமில்லை
எவரும் என்றும் அணிந்தே உள்ளனர்
அவரவர்க்கு ஏற்ற கவசம்
வெவ்வேறு நிறத்தில் கவசம்
நீயும் நானும் விலக்கல்ல
ஆனால் கவசம் கழற்றிக் களைப்பாற
ஒரு உயிராவது உடன் வேண்டும்
மூடியற்ற முகம் பார்த்தும்
நேயமுற்றிடும் துணை வேண்டும்
நன்றி : கவிஞர் சிவசுந்தரிபோஸ், தினம் ஒரு கவிதை
சீனிஅபு, சரவணபவன், சுமா உப்பிலி, சா.கணேசன், பரமசிவம்பிள்ளை, அபிராமிபட்டர், குட்டி ஹமாம், ஆப்பு, இட்லிவடை, காயாம்பூ, கவிதா மாரிமுத்து, டைனோ பாய், திராவிட், இணையக் குசும்பன் முதலாக நாட்டாமை வரைக்கும் அத்த்...த்த்னை முகமூடிகளுக்கும் சமர்ப்பணம்.
கவிதை இன்னும் கொஞ்சம் உள்ளேயும் போகிறது....
உங்களுக்கு புரிகிறதா..??
Wednesday, July 28, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
மாமன்னன் ----------------------------- மாரி செல்வராஜின் மாமன்னன் பார்த்தேன் உன் வயதை விட குறைந்த வயதுடைய ஒருவன் உன் தந்தையை ஒருமையில் அழை...
No comments:
Post a Comment