மனைவியோடு
பயணிக்கிறபோதுதான்
பழைய காதலியை
பார்க்க நேர்கிறது
இங்கு
மாதக் கடைசியில்தான்
புத்தகக்கண்காட்சி
நடத்தப்படுகிறது
கடைசிக் காசில்
சிகரெட் பற்றவைத்துத்
திரும்பும்போதுதான்
கை நீட்டுகிறார்கள்
பிச்சைக்காரர்கள்
வெகுநேரமாகியும்
வராத பேருந்து
பழைய நண்பர்கள்
எதிர்ப்படுகிற
பொழுதிலெல்லாம்
வந்து தொலைக்கிறது
எப்பொழுதாவது
கவிதை எழுத
உட்காரும் பொழுதுதான்
எங்கிருந்தாவது
காதில் விழுகிறது
மரணச்செய்தி
கவிஞர் காற்றுத்தேவன் தி.ஒ.கவிதை யில் எழுதியது.
மரணம் பற்றியே மூன்று நாட்களில் எத்தனை கவிதை எழுதிவிட்டார்கள் நம் கவிஞர்கள்..!!!
கவிதையோடு காரியமும் தேவை என்று காசி சொன்னதை அருண் தவறாக புரிந்து கொண்டு இருப்பார் போல.
No comments:
Post a Comment