Monday, July 26, 2004

பிரசவக்காட்சி
============

   அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்கள் கொடுத்து வைத்தவர்கள். நம்மூர் போல அல்லாமல், இங்கே லேபர் ரூம் உள்ளே கணவனுக்கும் அனுமதி உண்டு. மனைவியின் பிரசவத்தின் போது கூட இருந்து, பிரசவ அனுபவத்தில் அவளுக்கு உதவி செய்யவும், அவளுடைய வலியை பகிர்ந்து கொள்ளவும், உணர்வு ரீதியாக ஒத்தாசை செய்வதும் தான் இதன் குறிக்கோள். என்னுடைய பல நண்பர்கள் தங்கள் குழந்தை பிறந்தவுடன் மூன்று நாளைக்கு பேயறைந்தது போல கிடப்பதை பார்த்திருக்கிறேன்.

ammaa         

   என்னளவில் இது அநியாயம். தேவையற்ற வீண்வேலை. என்னுடைய தமக்கைகளின் பிரசவத்தின்போது,  பிரசவ வார்டுக்கு வெளியே நின்று அவர்களின் குரல்களைக் கேட்பதற்கே அடி வயிறு கலங்கிப் போனது. அதற்குப் பிறகு அம் மாதிரி விஷப்பரீட்சைகளில் இறங்குவதில்லை என முடிவெடுத்து விட்டேன். என் சூர்யா பிறந்தபோது நான் இந்தியாவிலேயே இல்லை.

    நான் சொலவதை கேட்பதற்கு ரொம்ப பிற்போக்குத்தனமாகவும், அரக்கத்தனமாகவும் தான் தோன்றும். ஆனால், ஒரு ஆணின் மனநிலையையும், பெண்ணின் மனநிலையையும் ஒப்பிட்டால், பெண்கள் பன்மடங்கு திடசித்தம் கொண்டவர்கள். இது தெரிந்துதான்  இயற்கை அவர்களுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை தந்திருக்கிறது. தவிரவும் குடும்பத்தில் ஆணின் கடமைகள் என்றும், பெண்ணின் கடமைகள் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறைகள் இன்னமும் அந்தளவு மாறிவிடாத பட்சத்தில், பெண்ணின் பிரசவ அனுபவத்தையும் ஆண் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்று கூறுவது, கொஞ்சம் அதிக பட்சம்தான். இதை இங்கு வீடியோ காமிராவில் படம் பிடித்து பின்னால் போட்டுப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். தாய்மைக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்றாலும், லேபர் வார்டின் ரத்தச் சொத சொதப்பை வீடியோ காமிராவில் படம் பிடித்துத் தான் மதிப்பு கொடுக்க வேண்டுமோ..??. இன்னமும் ஒன்று, குழந்தை வயிற்றுள் இருக்க்ம்போது ஸ்கான் செய்த ஃபோட்டொவை அமெரிக்க நண்பர் தன் க்யூபிக்களில் மாட்டி வைத்திருந்தார். வெல்லக் குழம்பினுள், சப்பாத்தி மாவு உருண்டையை  போட்டது மாதிரி இருந்த அந்த படத்தில் தன் "குழந்தையை" எப்படி பார்த்தாரோ..??

"It was a Great Experience" என்று இதையே அரைக் கண்ணோடு சிலாகித்துச் சொன்ன நண்பர்களையும் நான் கண்டிருக்கிறேன். என்ன எஞ்ஜாய் செய்தார்களோ நானறியேன். மேலை நாட்டினர் செயல்களுக்கெல்லாம் ஏதெனும் அர்த்தம் இருக்கும் என்று தாங்களே நினைத்துக் கொண்டு அதைப் பாவிப்பதில் பெருமை கொண்டவர்களோ இவர்கள் என்று கூட நான் நினைப்பதுண்டு.

       இது மாதிரி பக்கத்தில் இருந்து பார்த்து சூர்யா பிறந்திருந்தால், " இந்த மாதிரி படுத்தறியேடா " என்று அவன் பிறந்தவுடன், ப்ருஷ்டத்தில் ரண்டு வைத்திருப்பேன் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மனரீதியாகக் கூட எக்கச்சக்கத்துக்கு பாதிக்கப் பட்டிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.

  


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...