Wednesday, July 14, 2004

தொழுத கையுள்ளும்...
======================

சண்டியர் படத்தைப் பார்க்கும்போது மனதில் எல்லோருக்கும் ஒரு இனம்புரியா சோகம் இருந்து கொண்டிருந்தது. விருமாண்டியின் கோபம், அவன் வெறி, மனதில் பட்டதை பளிரென்று எதிராளியிடமே போட்டுடைக்கும் தன்மை, நம்பினவர்கள் தனக்கே குழி பறித்ததும் அவன் பதைப்பு, என்று அவன் பாத்திரத்தன்மை அழகாக வடிக்கப்பட்டிருந்தது. குழந்தை மனசு கொண்ட அவன் அலைக்கழியும் தருணங்களில், "ஆஹா...எல்லாமே இவன் வாயால் தானே வந்தது " எனு தோன்றினாலும், கள்ளமில்லா உள்ளத்துக்கு சொந்தக்காரனான அவன், சதி வலைகளினின்றும் தப்பிக்க வேண்டும் என்று தோன்றிக்கொன்றே இருந்தது. உங்களுக்கும் தோன்றி இருக்கும்.

மனிதர்கள் பல வகைப் பட்டவர்கள்.உணர்ச்சிக் குவியலாய் வெடித்து, விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், படாலென்று பேசி விட்டு , பிறகு சட்டென்று அதை மறந்து, குழந்தை போல குதிப்பவர்கள் ஒரு வகை. கோபம் இவர்களின் ஊனமென்றாலும் நம்புதற்கு உரியவர்கள். இவர்கள் ஒரு வகையில் அனுதாபத்துக்கு உரியவர்கள். இன்னோரு வகை எல்லா உணர்ச்சிகளையும் சரியாக கையாண்டு, தேவையானவற்றை , தேவையான தருணங்களில் வெளிப்படுத்தி, எமோஷனல் இந்டெலிஜன்ஸ் என்ற பொக்கிஷத்தை கை வரப் பெற்றவர்கள். இதை எப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்று பார்ப்பதை வைத்துத் தான், இவர்களுடைய இந்தக் குணத்தால் அவர்களின் நண்பர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது.

இணையக் குமுதத்தில் நான் கீழ்க்கண்ட வாசகங்களைப் பார்த்தேன். Stupid Quote of the day என்று போடப்பட்டிருக்கும் அது வெகு நாட்களாக அங்கிருப்பதால், நாட்கள் நகரவில்லையா..இல்லை...what I see is what you Get என்ற வாக்கியத்தின் இடத்தை அது எடுத்துக்கொண்டதா ..நானறியேன்.

ATT00847

"இதன்படி பார்த்தால், பிற்பாடு தேவையாக இருப்பார்கள் என்ற ஜாக்கிரதை உணர்வில் யாருடனும் பகைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் பாதங்களை மிதிக்கக்கூடாது " என்ற அர்த்தம் வருகிறது.

அப்படியானால் எப்போதும் எல்லோர் பின்புறங்களிளும் முத்தமிட்டுக் கொண்டே இருக்க வேணுமா....??

கேட்கவே நாராசமாய் இல்லை...??

காற்றுப்போல சுதந்திரமும், கவிதைபோல் தனிக்குணமும் சண்டியர் சொத்தா..?? வெகுஜனம் லோகாதாயக் குழியில்தான் புரண்டு வளர வேண்டுமா..?? அதுதான் வளர்ச்சியா..??

அதுதான் வளர்ச்சி என்றால் கேன்சர் கூட வளர்ச்சிதான்....!!!


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...