Thursday, October 07, 2004

மரத்தடி ஆண்டுவிழாப் போட்டி முடிவுகள்

சும்மாவாச்சுக்கும் போட்டி அறிவித்து விட்டு அதைப் பற்றி மறந்து போகாமல், தொடர்ந்து போட்டி நடத்துவதென்பதும், நல்ல விஷயமுள்ள நடுவர்களை அழைத்து, படைப்புகளை தேர்ந்தெடுத்து பரிசு வழங்குவதும் மிக நல்ல விஷயம்.

சமீபத்தில் மரத்தடி போட்டியில் பரிசு பெற்ற கதைகளையும், கவிதைகளையும் மரத்தடி டாட் காமில் படிக்க நேர்ந்தது. போட்டிக்கு வந்திருந்த எல்லாக் கதைகளையும் படித்திருந்திருக்கலாம். படிக்காத காரணம் - விட்டுப் போன கதை படிக்கும் பழக்கமும், சோம்பேறித்தனமும். படைப்புகள் நிஜமாகவே நன்றாகத் தான் இருந்தன. எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் பார்வையிலிருந்து தரப்பட்ட அவரது "நடுவர் மடல்" ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான் எனினும், கதை படிக்கும் பழக்கமே வழக்கொழிந்து வருகின்ற இந்த அவசர அதிவேக யுகத்தில், கதை எழுத, அதை இத்தனை மெனக்கெடலோடு செய்திருக்கின்ற நண்பர்களுக்கு "என் உயரத்திலிருந்து" வாழ்த்தும் வணக்கங்களும்.

ஜெயஸ்ரீ இத்தனை அப்ஸர்வேஷனோடு, இத்தனை பாசுரம் கலந்து, இப்படி இன்னொரு (பாம்பே)ஜெயஸ்ரீயை துணைக்கழைத்துக் கொண்டு, இவ்வளவு அநாயாசமாக எழுதுவார் என்பது எனக்குத் தெரியாது போயிற்று. அவருடைய ஆரம்ப கால மரத்தடி மடல்களில் டெலிஃபோனில் வம்பளக்கும் ஒரு இன் டெலக்சுவல் மாமியாகத்தான் அறிமுகம் ஆனார். அவருக்குள் இதத்னை படைப்பூக்கம் இருப்பது மிக நல்ல விஷயம். அவருடைய மற்றைய படைப்புகளையும் விலாவரியாக படிக்க எண்ணம். மற்ற படைப்புகளும் இதே சாயலில் இருப்பின், எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கும். பார்ப்போம். இரண்டாம் பரிசுக் கதை எழுதிய விஜயாலயன், சாதாரண விஷயத்தை எழுதி இருந்தாலும், இலங்கைத் தமிழில், இலங்கை சமூக பொருளாதார விடயங்களயும் அங்கங்கே தெளித்து 'ரவுசு' பண்ணி இருந்தார். மூன்றாம் பரிசுக் கதையின் ஃபார்மட்டே கொஞ்சம் பழகிய ரகமாக தோன்றியதால் உள்ளே போகவே இல்லை. சந்திரசேகரன் கிருஷ்ணனின் கவிதையும், நிர்மலா டீச்சரின் கவிதையும் அசத்தல். கிருஷ்ணனின் கவிதை எளிமையாக இருந்தாலும், நிர்மலாவின் கவிதை - சொல்லப்பட்ட உணர்வு சிக்கலானதால் - கொஞ்சம் பாயை பிராண்ட வைத்தது.

இத்தனை அபாரமாக நடந்த விஷயத்தை நம்ம எம்.கே.கே கடேசியில் சொதப்பி விட்டார். ராமகிருஷ்ணன் நன்றி சொன்ன நண்பர்கள் பெயர் அவருக்கு உறுத்தி விட்டது போல. பாரா வும் , பத்ரியும் உதவி செய்த விஷயத்தை என்னவோ பெரிய சமாச்சாரமாக பேசி விட்டு, இதைப் போல அறிவியல் புனைகதைக்கு இரா.மு உதவுவாரோ என்ற கிளை, நக்கல், குசும்பு
கேள்வி.

அடே ஃபில்டர் காப்பி அம்பி...இரா. மு உதவினால் என்ன தப்புண்ணேன். சுஜாதா உதவி கேட்டு, முருகனும் மனம் உவந்து, செய்தால் மரத்தடி என்ன வேண்டாமென்றா சொல்லும். அப்படி என்ன சென்மப் பகை நமக்குள்ளே...!!!
ஏதோ சில விரும்பத்தகாத சம்பவங்கள், உணர்ச்சி வசப்பட்ட சொல்லாடல்கள், உரிமை எடுத்துக் கொண்டு செய்த சில விஷயங்கள் கடந்த காலத்தில் நடந்திருந்தால், அதையே நினைத்து குத்தி, சொறிந்து, பொருக்குத் தட்டியிருக்கும் காயத்தை ஏன் புண்ணாக்க வேண்டும்.

எம்.கே.கே அம்பி...கொஞ்சம் லேட்டா சொல்லிட்டேண்ணு எனக்கு வருத்தம்தான்.

ஆனா உம்ம மேல இருக்கற அக்கறையில சொல்றேன் நான் ..!!! அந்த வாத்தியத்தை கொஞ்சம் கீழ வச்சிட்டு பேனாவை எடும்.

அது போதும் நோக்கு...!!!

2 comments:

  1. அது போதும் நோக்கு...!!!
    or நேக்கு...!!!

    ReplyDelete
  2. அன்பு - "பேனா போதும் நோக்கு" என்கிறார் மூக்கன்.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...