Friday, October 08, 2004

ஜூனியர் பாலையா vs வையாபுரி

bush

அமெரிக்க தேர்தல் வழக்காடு மன்றத்தின் இரண்டாவது சுற்று பார்த்து விட்டு வந்து சுடச்சுட எழுதுகிறேன். மீடியா மொத்தமும் அடுத்த புதன் வரை இதைத் தான் பினாத்திக் கொண்டு இருக்கப்போகிறது. அவர்கள் கருத்தினால் பாதிக்கப்படும் முன், என் 100% சொந்தக் கருத்து இது:

முதல் முறை சொதப்பியது போல புஷ் அவ்வளவாக சொதப்பவில்லை எனினும் அவருடைய சில குறைபாடுகள் இன்னமும் நீங்கவில்லை என்பது கண்கூடாக தெரிந்தது. காட்டாக, கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது, தகுந்த வார்த்தைகள் கிடைக்காமல் குரலை இழுப்பதும், சர்ச்சையான கேள்விகளை எதிர்கொள்ளும்போது அவருடைய "கார்ட்டூன்" ரெஸ்பான்ஸ்களும், ஒரு அமெரிக்க அதிபருடையதாக அல்லாமல் முதிர்ச்சி அற்றதாக இருந்தது. பாதி நேரம் கெர்ரி வையாபுரியின் குற்றசசாட்டுகளை சமாளிக்கவே நேரம் இருந்ததே ஒழிய, அவரை தாக்க பாலையா புஷ்ஷுக்கு சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை.

kerry

எத்தனை பிரச்சினைகளை பேசினாலும் இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப்போவது ஈராக்..ஈராக்...ஈராக். அதை கெர்ரி சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளும் வரை வெற்றி அவருக்குத்தான்.

தவிரவும் Tax Cut யாருக்கு உபயோகமளிக்கிறது என்பதிலும், லேடனை இன்னமும் பிடிக்க முடியவில்லை என்பதிலும், உலகளவில் அமெரிக்காவிற்கு எதிரான மனோபாவம் வளர்ந்திருப்பதற்கும், Bunker Buster வகை நீயூக்ளியர் குண்டுகளை நாம் உருவாக்கிக் கொண்டு, உலக நாடுகளுக்கு அணு ஆயுத விடயத்தில் அறிவுரை வழங்க முடியாது என்பதிலும் புஷ்ஷை எதிர்த்து கெர்ரி வைத்த கருத்துக்கள் நியாயமாகவே இருந்தன.

ஈராக் - அதுதான் இந்த அமெரிக்க தேர்தலின் மந்திர வார்த்தை. மறைமுகமாக சதாம் இந்த விடயத்தில் புஷ்ஷை ஜெயித்து விட்டதாகத் தான் தோன்றுகிறது.

பார்ப்போம்...அடுத்த மோதல் ....... அடுத்த புதன்...


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...