Thursday, March 11, 2004

ரசிகன் ·பாஸ்ட்
=================

ரஜினி மீதான விமரிசனத்துக்கு எங்க ஊரு ராமகிருஷ்ணனின் பதில்


"கொஞ்சம் காசு பார்க்கலாம்னு ரசிகர்கள் நினைச்சிருந்தால்
இன்னும் ரஜினியை பிடித்தே தொங்கிட்டிருக்க மாட்டார்களே!ரஜினியை நம்பி
(?) அரசியல் பிழைப்பு நடத்துமளவுக்கு சோ முட்டாள் என்பதையும் நம்ப
முடியவில்லை! ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் பப்ளிசிட்டி கிடைக்கும்னு
லதா மட்டுமல்ல ரஜினியின் பாப்புலாரிட்டி பற்றி தெரிந்தவர்கள் கூட
ஓத்துக்கொள்ள மாட்டார்கள்! தேர்தல் முடிஞ்சதும் மரம் வெட்டிகள் சாட்டையை
சொடுக்கப் போவது நிச்சயம் என்பது விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு நல்லாவே தெரியும்..

அது சரி, ஜு.வி, குமுதம் ரிப்போர்ட்டர் ரொம்பவும் கவனமாக எழுதியிருப்பதை
கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். என்னைப் பொறுத்த வரை, ரஜினியிடமிருந்த
இந்த தேர்தலிலும் சிக்னல் கிடைக்காத சிக்கல் தொடரும்...!
"



ரஜினி ராம்கி என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் அவருக்கு இருக்கும்
இருக்கும் ஆர்வம் போலவே மா¡யவர்த்துக்காரர் அவர் என்று சொல்வதில்
எனக்கு சந்தோஷம்.

மாயவரத்துக்கென்று ஒரு வெப்சைட் நடத்தி வருகிறார். இப்போது ப்ளாக்குகிறார்.
பத்த்ரிக்கைகளில் நிறைய கேள்வி கேட்கிறார். ரஜினிக்கென்றே பிரத்யேகமாக வெப்சைட்
ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இவரோடு கி.ரமேஷ்குமார் என்று இன்னொரு பாங்காக் ஆசாமியை குழப்பிக்கொண்டு , இருவரில் யார்
ஜு.வி யில் பணிபுரிந்தது என்று நேற்றுவரை குழப்பிக் கொண்டிருந்தேன். ரமேஷ்குமாரும்
மாயவத்துக் காளைதான்.


இன்னும் சொல்லாம்...ஜால்ரா சத்தம் கேட்கிறது என்று யாரோ
அங்கே முணுமுணுக்கிறார்கள்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...