Friday, March 05, 2004

இங்கே பின்னூட்டம் இட்டிருந்த பிரசன்னா சில வலைப்பூக்களை பரிந்துரைத்திருந்தார்.

சுந்தரவடிவேல் மற்றும் தங்கமணி ஆகியோரின் வலைபூக்கள் அருமை. தங்கமணியின் உயரம்
சற்றே சிரமப்படுத்தினாலும், தொடர்ந்து படித்தால் புரிந்து விடும் போல் ஒரு நம்பிக்கை.

சுந்தரவடிவேல் எழுத்து அவருக்கு கிடைத்த வரமென்றே சொல்லுவேன். அதிலும் அந்த ' நாயாய், பன்றியாய் ..' கவிதை.
ஊனையும் உயிரையும் உருக்கும் அந்த தாய்தேச சோகம் இப்படித்தான் எழுத வைக்கும். அவர் எழுத்துக்கு
என் மானசீக வணக்கம்...

கூடவே இந்தக் கொடுமை வெகு விரைவில் தீர , என்னைபோல் அவர்களும் இஷ்டம்போல் தாய்நாடு சென்று மீள என் பிராத்தனைகள்.

இணையத்தில் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள் என்று நான் தந்த பட்டியல் அன்றைய தேதியில் , என் அறிதல்களுக்குள் அடங்கியது.அந்தப் பட்டியல் மாறி, நீண்டு, வளர்ந்து , தன்னில் இன்னும் பலரையும் சேர்த்துக் கொண்டு
அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...