Tuesday, August 31, 2004

மரத்தடி மண்டகப்படி - 6

விழா மலர் என்பது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு பின்னும் விளம்பரதாரர்களைத் திருப்திபடுத்த சாஸ்திரத்துக்காக செய்யும் விஷயம் என்று இத்த்னை நாள் நினைத்திருந்தேன். ஆனால் அமீரக ஆண்டு விழா மலரைப் பார்த்த பிறகு அந்த எண்ணம் ஓரளவு மாறி விட்டது. என் கவிதை பதிப்பிக்கப் பட்டது என்பதற்காக சொல்லவில்லை.:-) உண்மையிலேயே சிரத்தை எடுத்துச் செய்திருந்தார் தம்புரான்.

மரத்தடி வலைப் பக்கத்தில் படைப்புகளை நீங்கள் ரெகுலராக வலையேற்றிக் கொண்டிருந்தாலும், ஆண்டு விழாவுக்காக ஒரு மலர் வெளியிடுவது நல்ல ஐடியா என்று எனக்குத் தோன்றுகிறது. வச வச வென்று படைப்புகள் வேண்டாம். மறு பதிப்புகள், பழைய சரக்கு ஆகியவற்றைத் தள்ளிவிட்டு இதற்கென்றே பிரத்யேகமாக எழுதிய படைப்புகளை வெளிடுவது நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

நேற்று மரத்தடி.காம் பக்கம் சுற்றிக் கொண்டிருந்தபோது நிர்மலா டீச்சர் எழுதிய ஒரு கவிதை நெத்தியடியாக இருந்தது. தலைப்பு மட்டும் கொஞ்சம் நன்றாக வைத்திருக்கலாம்.

கச்சேரிக்கணக்குகள்
==================

கூடலுக்கு முன்னறிவிப்பாய்
பின்னிருந்து அணைக்கையில்
ருசிமாறிய காப்பிக்காக
காலையில் கடிந்தது நினைவில்

சில்மிஷங்கள் தொடர
சிரிக்கும் உன் முகத்தில்
சண்டையில் மிரட்டும்
கோபமுகம் நிழலாய்

கிசுகிசுப்பாய் காம உளரல்கள்
கிறக்கி முடிக்குமுன்
முந்தின நாளின் கடுஞ்சொல்
தொடர்ந்து எதிரொலியாய்

சுயவெளியற்ற உள்வட்டத்தில்
சாரம் குறையாமல் நினைவுகள்
கடமையாய் பழக்கத்தில்

ஒத்துழைக்க நினைத்தபோதும்
நினைவடுக்கில் உறுத்தல்கள்
நெகிழாது இறுக்க

சுருதி சேராத கச்சேரி
என் கணக்கில்
இன்னொன்றாய்.


அடுத்த முறை மனைவியை "அணுகும்போது" இதைப் படித்தவர் சற்றேனும் யோசித்தால், அது இந்தக் கவிதையின் வெற்றி.

என்னளவில் இது, படித்த கணத்திலேயே உள்ளே இறங்கி விட்டது.


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...